Newsசுரங்கப்பாதைகளைத் தடுக்கும் ஓட்டுநர்களுக்கு $4,097 On-The-Spot அபராதம்

சுரங்கப்பாதைகளைத் தடுக்கும் ஓட்டுநர்களுக்கு $4,097 On-The-Spot அபராதம்

-

சுரங்கப்பாதைகளில் உயர வரம்பை மீறி டிரக்குகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு 4,097 டாலர் அபராதம் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பாரவூர்தியின் பதிவு 06 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும்.

அண்மைக்காலமாக சிட்னி நகர சுரங்கப்பாதைகளில் ட்ரக் நெரிசல்கள் காரணமாக பல மணித்தியாலங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள சம்பவங்களை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் சாலை அமைச்சர் ஜோன் கிரஹாம், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சாரதிகளே இவ்வாறு கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்றும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

இதுபோன்ற குற்றங்களை தொடர்ந்து செய்யும் டிரக்கிங் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு உறுதியளிக்கிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...