Newsஇலங்கையிலிருந்து வெற்றிலை & வாழைப்பழங்களை கொண்டு வந்த நபருக்கு சிட்னி விமான...

இலங்கையிலிருந்து வெற்றிலை & வாழைப்பழங்களை கொண்டு வந்த நபருக்கு சிட்னி விமான நிலையத்தில் நேர்ந்த கதி

-

வெற்றிலை, வாழைப்பழம், மாவு உள்ளிட்ட சில உணவுப் பொருட்களை இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தனது சூட்கேஸில் கொண்டு வந்த நபருக்கு 5,500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் மே 16 ஆம் திகதி சிட்னி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள புதிய உயிரி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவ்வளவு அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதே வாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் இருந்து பிரிஸ்பேன் மற்றும் மெல்பேர்னுக்கு வந்த 3 விமானப் பயணிகளும் தாவர உதிரிபாகங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த 4 பயணிகளுக்கும் மொத்தமாக 22,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல், ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன, அதன் படி, தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருபவர்கள் அல்லது கொண்டு வரப்பட்ட பொருட்களை அறிவிக்காதவர்களுக்கு $5,500 அபராதம் விதிக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...