Cinemaஇராமாயணம் படத்தில் இராவணனாக கே.ஜி.எப். புகழ் யாஷ்

இராமாயணம் படத்தில் இராவணனாக கே.ஜி.எப். புகழ் யாஷ்

-

திரைப்பட இயக்குநர் நித்தேஷ் திவாரியின் இராமாயணம் படத்தில் இராமர் மற்றும் சீதை வேடங்களில் உண்மையான ஜோடியான, இந்தி திரைப்பட நடிகர்களான ஆலியா பட் மற்றும் அவரது கணவர் ரன்பீர் கபூர் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

நடிகை ஆலியா பட், 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் முன்பே சீதை வேடம் ஏற்று நடித்துள்ளார்.

இதேபோன்று இராமாயணம் படத்தில், இராவணன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சுவார்த்தையில், கே.ஜி.எப். பட புகழ் நடிகர் யாஷ் பெயர் அடிபடுகின்றது.

இதுபற்றி கிடைத்த தகவலின்படி, படத்தில் முதல் தேர்வாக ஆலியா பட் உள்ளார். எனினும், படப்பிடிப்புக்கான சரியான திகதிகள் பல காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், படம் உருவாவதற்கு நீண்டகாலம் தாமதம் ஏற்படும் சூழலில், இயக்குனர் மது மந்தனா மற்றும் நித்தேஷ் இருவரும் தங்களது முதல் தேர்வில் உறுதியாக இருப்பது என முடிவு செய்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...