Newsபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'பிரிக்கப்படாத இந்தியா' சுவரோவியம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பிரிக்கப்படாத இந்தியா’ சுவரோவியம்

-

இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ‘பிரிக்கப்படாத இந்தியா’வை சித்தரிக்கும் சுவரோவியம் தொடர்பாக பல்வேறு நாடுகளும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

இந்திய தலைநகர் புது டெல்லியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் திறந்து வைத்தார்..

இந்த புதிய கட்டடத்தில் ‘பிரிக்கப்படாத இந்தியாவை’ காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரிக்கப்படாத இந்தியா சுவரோவியம் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வரை இந்தியாவின் ஒரு பகுதியாக விரிந்துள்ளதாக காட்டுகிறது.

இந்த சுவரோவியம் பண்டைய மௌரிய பேரரசைக் காட்டுவதாகவும் அது ‘மக்கள் சார்ந்த’ ஆட்சியின் செழிப்பான காலத்தை பிரதிபலிப்பதாகவும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவரோவியத்துடன் எவ்வித அரசியல் தொடர்பும் இல்லை என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...