Newsபோலி ஆவணங்களை பயன்படுத்தி கனடாவிற்குள் நுழைந்த 700 இந்திய மாணவர்கள்

போலி ஆவணங்களை பயன்படுத்தி கனடாவிற்குள் நுழைந்த 700 இந்திய மாணவர்கள்

-

போலி ஆவணங்கள் மூலம் கனடாவில் நுழைந்த இந்திய மாணவர்கள் 700 பேரை வெளியேற்றும் நடவடிக்கையை கனடா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்ப்ரீத் சிங். இவர் 6 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் கனடா சென்றுள்ளார்.

இவருடன் கனடா சென்ற இந்திய மாணவர்கள், நிரந்தர குடியுரிமை கோரி கனடா அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்னர்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லவ்ப்ரீத் சிங் உட்பட 700 இந்திய மாணவர்கள் பஞ்சாப்பில் இருந்து கனடாவுக்கு போலி ஆவணங்களை பயன்படுத்தி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணையை மேற்கொண்ட கனடா அரசாங்கம், லவ்ப்ரீத் சிங் வரும் 13 ஆம் திகதிக்குள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.

இப்படியாக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, 700 இந்திய மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் கனடா சென்றுள்ளனர்.

இந்த மோசடியை கனடா அரசாங்கம் கண்டறிந்து, போலி ஆவணங்கள் மூலம் கனடா வந்த இந்திய மாணவர்கள் 700 பேர் வெளியேறும்படி அறிவித்துள்ளது. இதையடுத்து ,அந்த மாணவர்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உலக பஞ்சாபி சங்கங்களின் சர்வதேச தலைவரும், ஆம் ஆத்மி எம்.பி.யுமான விக்ரம்ஜித் சிங் சானே, கனடா அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், மாணவர்கள் மோசடி செய்யவில்லை என்றும், அவர்களுக்கு போலி கடிதங்களை கொடுத்து ஏஜென்ட் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என விளக்கினார்.

இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதங்களை சரிபார்க்காமல் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய மாணவர்கள் கனடாவுக்குள் நுழைய குடியுரிமைத்துறையும் அனுமதித்துள்ளது.

விக்ரம்ஜித் சிங்கின் வேண்டுகோள் கடிதத்தை அடுத்து, இந்திய மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கனடா அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...