Newsபுலம்பெயர முயற்சி செய்த 3,800 பேர் உயிரிழப்பு

புலம்பெயர முயற்சி செய்த 3,800 பேர் உயிரிழப்பு

-

மெனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா நாடுகள் வழியாக உள்ள இடப்பெயர்வு பாதைகளை பயன்படுத்தி புலம்பெயர்வோர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக நிலை ஏற்படுவதாகவும், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3,800 பேர் எனவும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

சஹாரா பாலைவனம் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளை கடந்து செல்ல முயற்சி மேற்கொள்ளும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும்.

இந்த ஆபத்தான பலி எண்ணிக்கை, மெனா பிராந்தியத்திற்குள்ளே உள்ள இடப்பெயர்வு பாதைகளிலும், அங்கிருந்து வெளியேறும் வழிகளிலும் புலம்பெயர்வோர்களுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பை உறுதி செய்வதில் உடனடி கவனமும் ஒருங்கிணைந்த முயற்சிகளும் தேவை என்பதை காட்டுகிறது என்று அந்த அமைப்பிற்கான மத்தியகிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா மண்டல இயக்குனர் ஓத்மான் பெல்பீசி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை மேலும், “இந்த மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளவும் மேன்மேலும் ஏற்படக்கூடிய உயிர் இழப்புகளைத் தடுக்கவும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும் அதிகரிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்துகிறது.

இதன்படி, 2021-ல் பதிவு செய்யப்பட்டதை விட இறப்பு எண்ணிக்கை 11% அதிகம் என்றும், 6 ஆண்டுகளுக்கு முன்பு 4255 ஆக இருந்தது. அதன்பின் தற்போதுதான் ஒரு வருடத்தில் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பலியானோர்களில் 92 சதவீதம் பேர் அடையானம் காணப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

மேற்கூறிய பகுதிகளிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் கடல் வழிகளில், லெபனானில் இருந்து கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு புலம்பெயர்வுக்காக படகுகளில் பயணிப்போருக்கு ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இப்பிராந்தியத்தில் அதிக தரைவழி உயிரிழப்புகள் போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும், மேலும் அங்கு புலம்பெயர்வோருக்கு எதிராக வன்முறைகளும் அதிகரித்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

ஏமன் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பாதையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 795 பேரில் பெரும்பாலானோர் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஏமனின் வடக்கு மாகாணமான சாதாவில் பெரும்பாலான இறப்புகளும், லிபியாவில் 117 இறப்புகளும், மற்றும் அண்டை நாடான அல்ஜீரியாவில் 54 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் Skin Cancer-ஆல் பாதிக்கப்படும் 2/3 ஆஸ்திரேலியர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் தோல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக $10 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மெலனோமா என்பது ஆஸ்திரேலியாவில் பொதுவாக கண்டறியப்பட்ட...

New Work and Holiday Visa வைத்திருக்கும் 3 நாடுகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் புதிய வேலை மற்றும் விடுமுறை விசாவிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ள நாடுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய வேலை மற்றும் விடுமுறை...

ஆஸ்திரேலியாவில் Tradies வேலை தேடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பு

BizCover ஆனது ஆஸ்திரேலியாவில் அதிக தேவை உள்ள Tradies வேலைகள் பற்றிய புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுளின் வேலை தேடுதல் தரவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த அறிக்கை...

Halloween கொண்டாட்டங்களுக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்திய சந்தை தரவுகளின்படி ஐந்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் Halloween கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு சில்லறை விற்பனையாளர்களிடையே Halloween...

Halloween கொண்டாட்டங்களுக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்திய சந்தை தரவுகளின்படி ஐந்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் Halloween கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு சில்லறை விற்பனையாளர்களிடையே Halloween...

Qantas ஊழியர்களுக்கு $1000 போனஸ்

Qantas Airlines குழு உறுப்பினர்களுக்கு $1,000 போனஸ் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஹோபார்ட்டில் நேற்று நடைபெற்ற விமான நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் Qantas தலைமை நிர்வாக அதிகாரி...