Newsபுலம்பெயர முயற்சி செய்த 3,800 பேர் உயிரிழப்பு

புலம்பெயர முயற்சி செய்த 3,800 பேர் உயிரிழப்பு

-

மெனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா நாடுகள் வழியாக உள்ள இடப்பெயர்வு பாதைகளை பயன்படுத்தி புலம்பெயர்வோர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக நிலை ஏற்படுவதாகவும், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3,800 பேர் எனவும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.

சஹாரா பாலைவனம் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளை கடந்து செல்ல முயற்சி மேற்கொள்ளும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும்.

இந்த ஆபத்தான பலி எண்ணிக்கை, மெனா பிராந்தியத்திற்குள்ளே உள்ள இடப்பெயர்வு பாதைகளிலும், அங்கிருந்து வெளியேறும் வழிகளிலும் புலம்பெயர்வோர்களுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பை உறுதி செய்வதில் உடனடி கவனமும் ஒருங்கிணைந்த முயற்சிகளும் தேவை என்பதை காட்டுகிறது என்று அந்த அமைப்பிற்கான மத்தியகிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா மண்டல இயக்குனர் ஓத்மான் பெல்பீசி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை மேலும், “இந்த மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளவும் மேன்மேலும் ஏற்படக்கூடிய உயிர் இழப்புகளைத் தடுக்கவும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும் அதிகரிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்துகிறது.

இதன்படி, 2021-ல் பதிவு செய்யப்பட்டதை விட இறப்பு எண்ணிக்கை 11% அதிகம் என்றும், 6 ஆண்டுகளுக்கு முன்பு 4255 ஆக இருந்தது. அதன்பின் தற்போதுதான் ஒரு வருடத்தில் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பலியானோர்களில் 92 சதவீதம் பேர் அடையானம் காணப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

மேற்கூறிய பகுதிகளிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் கடல் வழிகளில், லெபனானில் இருந்து கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு புலம்பெயர்வுக்காக படகுகளில் பயணிப்போருக்கு ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இப்பிராந்தியத்தில் அதிக தரைவழி உயிரிழப்புகள் போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும், மேலும் அங்கு புலம்பெயர்வோருக்கு எதிராக வன்முறைகளும் அதிகரித்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

ஏமன் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பாதையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 795 பேரில் பெரும்பாலானோர் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஏமனின் வடக்கு மாகாணமான சாதாவில் பெரும்பாலான இறப்புகளும், லிபியாவில் 117 இறப்புகளும், மற்றும் அண்டை நாடான அல்ஜீரியாவில் 54 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...