Newsசர்வதேச விண்வெளியில் மலர்ந்த பூவின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

சர்வதேச விண்வெளியில் மலர்ந்த பூவின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

-

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவு ஒன்றில் விண்வெளியில் மலர்ந்த ‘ஸின்னியா’ பூவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த பூச்செடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து வளர்க்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் செடிகளை வளர்ப்பது தொடர்பாக 1970 ஆம் ஆண்டில் இருந்தே விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும் பூச்செடியை 2015 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் ஜெல் லிண்ட்கிரென் வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

விண்வெளி ஆய்வின் ஒரு பகுதியாக இந்த செடி வளர்ப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

பூமியின் சுற்றுப்பாதையில் தாவரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைக் ஆய்வு செய்வதன் மூலம், விண்வெளியில் பயிர்களை எவ்வாறு வளர்ப்பது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்றும், நீண்ட கால விண்வெளி பயணங்களில் புதிய உணவு ஆதாரங்களை உருவாக்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

மேலும் நாசா விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கீரை, தக்காளி, மிளகு போன்றவற்றையும் மற்ற காய்கறிகளுடன் பயிரிட்டுள்ளனர் என்றும், இன்னும் ஏராளமான தாவரங்கள் வளர்க்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...