News3000 ஆண்டுகள் பழமையான 'மம்மி' கண்டுபிடிப்பு

3000 ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ கண்டுபிடிப்பு

-

பண்டைய எகிப்து நாகரிகத்தில் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்கும் முன், அதனை பதப்படுத்தி வைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

இவ்வாறு பதப்படுத்தப்பட்ட உடல் ‘மம்மி’ என்று அழைக்கப்படுகின்றது.

எகிப்தில் உள்ள பிரமிடுகளில் ‘டூடன் காமுன்’ உள்ளிட்ட பல்வேறு மன்னர்களின் ‘மம்மி’ உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமா அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த உடலோடு குப்பிகள், சோளம், கோகோ இலைகள் மற்றும் விதைகள் ஆகியவையும் புதைக்கப்பட்டிருந்தன.

இந்த ‘மம்மி’ உடலானது கி.மு. 1,500-ல் இருந்து கி.மு. 1,000 வரையிலான இடைப்பட்ட காலத்தில் லிமா பள்ளத்தாக்கு பகுதிகளில் உருவான ‘மஞ்சாய்’ என்ற கலாசாரத்தை சேர்ந்ததாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...