Sportsஉலக கிண்ண கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி இன்று ஆரம்பம்

உலக கிண்ண கிரிக்கெட் தகுதி சுற்று போட்டி இன்று ஆரம்பம்

-

13-வது 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகின்ற ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு ஒருநாள் உலக கிண்ண சுப்பர் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்காளதேஷ், இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

எஞ்சிய 2 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்தான 50 ஓவர் உலக கிண்ண தகுதி சுற்று போட்டி சிம்பாப்சிம்பாப்பேயில் இன்று (18) முதல் ஜூலை 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தொடக்க நாளான இன்று ஹராரேயில் இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன.

இதில் ஒரு போட்டியிலட கிரேக் எர்வின் தலைமையிலான சிம்பாப்பே அணி, ரோகித் பாடெல் தலைமையிலான நேபாள அணியை எதிர்கொள்கிறது.

மற்றொரு போட்டியில் ஷாய் ஹோப் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, மோனாங்க் படேல் தலைமையிலான அமெரிக்க அணியை சந்திக்கிறது.

இந்த அணிகள் ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்த போட்டி பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...