Newsஉலக அளவில் உணவு பாதுகாப்பில் பாதிப்பு - ஐ.நா கவலை

உலக அளவில் உணவு பாதுகாப்பில் பாதிப்பு – ஐ.நா கவலை

-

உக்ரைன் அணை தகர்ப்பு எதிரொலியால் உலக அளவில் உணவு பாதுகாப்பில் பாதிப்பு ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்காவை ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்ததாக சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டப்பட்டது.

அணையிலிருந்து பெருமளவு தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டனர். அணை தகர்ப்பு தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், உக்ரைன் அணை தகர்ப்பு நிகழ்வால் உலக அளவில் உணவுப் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் தெரிவிக்கையில்,

அப்பகுதி உலகின் மையமாக இருந்தது. கிரீமியாவுக்கு மட்டும் மல்ல, உலகிற்கு மையமாக இருந்தது. உணவுப் பாதுகாப்பில் நாம் ஏற்கெனவே சிரமத்தில் இருக்கிறோம். இதன் காரணமாக உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை நிச்சயமாக அதிகரிக்கும்.

அடுத்த அறுவடைக்கு அறுவடை செய்வதிலும், விதைப்பதிலும் மிகப் பெரிய பிரச்சனைகளை நாம் காணப்போவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. நிச்சயம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுதான் நடக்கப் போகின்றது என தெரிவித்தார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...