News750 பாகிஸ்தானியர்களுடன் கடலில் மூழ்கிய படகு

750 பாகிஸ்தானியர்களுடன் கடலில் மூழ்கிய படகு

-

கிரீஸ் கடற்பகுதியிலிருந்து ஜூன் 14 அன்று ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக சுமார் 750 பேருடன் சென்ற இழுவைப்படகு மூழ்கியதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செனட் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

ஏறக்குறைய 750 பேர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் குறைந்தது 500 பேரைக் காணவில்லை என்றும் ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பாகிஸ்தானியர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதாக நம்பப்படும் 10 மனித கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் கைதாகியுள்ளனர்.

பாக்கிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், பலர் தங்களால் இயன்ற வழிகளில் நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் இந்த சோகம் நிகழ்துள்ளதாக தெரிவித்தள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் இன்று திங்கட்கிழமை தேசிய துக்க நாளாக அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...