News750 பாகிஸ்தானியர்களுடன் கடலில் மூழ்கிய படகு

750 பாகிஸ்தானியர்களுடன் கடலில் மூழ்கிய படகு

-

கிரீஸ் கடற்பகுதியிலிருந்து ஜூன் 14 அன்று ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக சுமார் 750 பேருடன் சென்ற இழுவைப்படகு மூழ்கியதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செனட் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

ஏறக்குறைய 750 பேர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் குறைந்தது 500 பேரைக் காணவில்லை என்றும் ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பாகிஸ்தானியர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதாக நம்பப்படும் 10 மனித கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் கைதாகியுள்ளனர்.

பாக்கிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், பலர் தங்களால் இயன்ற வழிகளில் நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் இந்த சோகம் நிகழ்துள்ளதாக தெரிவித்தள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் இன்று திங்கட்கிழமை தேசிய துக்க நாளாக அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...