Newsமனித மூளைக்குள் சிப் வைக்கும் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அறிவிப்பு...

மனித மூளைக்குள் சிப் வைக்கும் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அறிவிப்பு – எலான் மஸ்க்

-

மனித மூளைக்குள் சிப் வைக்கும் நியூராலிங்க் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்காவினால் மனித மூளைக்குள் சிப் வைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk) தனது மூளை சிப் ஸ்டார்ட்அப் நிறுவனமான நியூராலிங்க் (Neuralink) இந்த ஆண்டு மனித சோதனைகளைத் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற விவா டெக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டெட்ராப்லெஜிக் அல்லது பாராப்லெஜிக் நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நியூராலிங்க் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், மஸ்க் தனது நிறுவனம் எத்தனை நோயாளிகளுக்கு இந்த சிப்பை பொருத்தும் மற்றும் எவ்வளவு காலத்திற்கு என்று கூறவில்லை.

ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் முதல் நோயாளிக்கு பொருத்தி சோதனையை தொடங்கும் என கூறினார்.

விலங்குகளின் நடத்தையில் அதன் விளைவுகள் குறித்து அமெரிக்க ஆய்வுகளை எதிர்கொள்ளும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு (நியூராலிங்க்) இது ஒரு தனித்துவமான சாதனையாகும்.

மூளை உள்வைப்புகள் மற்றும் அறுவைசிகிச்சை ரோபோக்களில் பயன்படுத்த நியூராலிங்க் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று FDA ஒப்புக்கொண்டது, ஆனால் சோதனை தொடர்பான கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டது.

நியூராலிங்க் தனது சாதனத்தை மனிதர்களுக்கு பாதுகாப்பானதாக நிரூபிப்பதில் வெற்றி பெற்றாலும், பாதுகாப்பான வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

Latest news

வார இறுதியில் விக்டோரியாவில் பனிப்புயல் ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஒரு பெரிய பனிப்புயல் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் ஏற்படும் மிகப்பெரிய பனிப்புயலாக இது...

ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு

ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஒரு வருடத்தில் அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. ஒரு மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 1.9% இலிருந்து 2.8% ஆக...

கிழக்கு கடற்கரையிலிருந்து ஐரோப்பாவிற்கு விரைவில் விமானங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான Qantas, நிகர லாபத்தில் 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிகர லாபம் $2.4 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், நிறுவனத்தின் வருவாய்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...