Newsடைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்ற பிரித்தானிய கோடீஸ்வரரை காணவில்லை

டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்ற பிரித்தானிய கோடீஸ்வரரை காணவில்லை

-

டைட்டானிக் கப்பலின் சிதைவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போயுள்ளது.

அதனை தேடும் பாரிய நடவடிக்கையை அமெரிக்க மற்றும் கனேடிய கடலோர காவல்படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணத்தை ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பயண நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலின் கப்டன் உட்பட 5 பேர் இந்த பயணத்தில் ஒன்றாக இருந்துள்ளனர்.

இவர்களில் 58 வயதுடைய நபர் ஒருவர் பிரபல பிரித்தானிய வர்த்தகர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பயணத்திற்கான டிக்கெட்டின் விலை 250,000 அமெரிக்க டாலர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் 4 நாட்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பதால், அந்தக் கப்பலில் உள்ளவர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...