Newsடைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்ற பிரித்தானிய கோடீஸ்வரரை காணவில்லை

டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்ற பிரித்தானிய கோடீஸ்வரரை காணவில்லை

-

டைட்டானிக் கப்பலின் சிதைவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போயுள்ளது.

அதனை தேடும் பாரிய நடவடிக்கையை அமெரிக்க மற்றும் கனேடிய கடலோர காவல்படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணத்தை ஆரம்பித்து சுமார் ஒரு மணித்தியாலம் 45 நிமிடங்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பயண நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலின் கப்டன் உட்பட 5 பேர் இந்த பயணத்தில் ஒன்றாக இருந்துள்ளனர்.

இவர்களில் 58 வயதுடைய நபர் ஒருவர் பிரபல பிரித்தானிய வர்த்தகர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பயணத்திற்கான டிக்கெட்டின் விலை 250,000 அமெரிக்க டாலர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் 4 நாட்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பதால், அந்தக் கப்பலில் உள்ளவர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றும் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

Latest news

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வாகனம் ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 80 தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை இழக்க நேரிடும் என்று மாநில காவல்துறை கூறுகிறது. தொலைபேசிகளை பயன்படுத்தும்...

அமெரிக்கா McDonald’s உணவகங்கள் மூலம் கொடிய பாக்டீரியா தொற்று

அமெரிக்காவில் உள்ள McDonald's உணவகங்கள் மூலம் கொடிய E. coli பாக்டீரியா தொற்று பரவியதால் 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் E. coli நோய்த்தொற்றுகள்...

முதல் முறையாக நிர்வாண மண்டலமாக மாறும் பிரிஸ்பேர்ண் Story Bridge

பிரிஸ்பேர்ணின் பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரிஸ்பேர்ண் Story Bridge-ஐ நிர்வாண மண்டலமாக மாற்றும் வேலைத்திட்டம் இன்று நடைபெறுகிறது. உலகின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான ஸ்பென்சர் டுனிக்...

குயின்ஸ்லாந்து பிரதமர் பதவியை இழப்பாரா?

குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி லிபரல் கட்சி வெற்றி பெற்று...

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வாகனம் ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 80 தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை இழக்க நேரிடும் என்று மாநில காவல்துறை கூறுகிறது. தொலைபேசிகளை பயன்படுத்தும்...

ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புவோருக்கு 5 நிலைகளில் ஆலோசனை

அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியைத் திட்டமிடுபவர்களுக்கு ஆஸ்திரேலிய கல்வி அமைச்சு தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நாட்டில் கல்வி கற்க 5 படி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புத்...