Newsஇன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்

-

சமூக வளைத்தளங்களில் முன்னிலை வகிக்கும் தளமான இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்கு புதிய அம்சம் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதாவது இன்ஸ்டாகிராம் இன் தாயகமான மெட்டா நிறுவனம் “சேனல்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சேனல் அம்சத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் படைப்பாளிகள் அவர்களது புதிய பதிவுகளை தினசரி தங்களது பின் தொடர்பாளர்களுக்கு(subscribers) இதன் மூலம் பதிவிட முடியும்.

இந்த சேனல் அம்சத்தை பயனர்கள் உருவாக்கும் போது அவர்களது கணக்கினை பின்தொடர்பவர்களுக்கு சேனலில் இணையும் படி அறிவுறுத்தும் நோட்டிபிகேஷன் உடனடியாக அனுப்பப்படும்.

இந்த சேனல் அம்சத்தில் சம்பந்தப்பட்ட கணக்கை வைத்து இருக்கும் படைப்பாளிகள் மட்டுமே புதிய பதிவுகளை இந்த சேனலில் பகிர முடியும்.

பின்தொடர்பாளர்களால் இந்த பதிவுகளை பார்வையிட்டு ரியாக்‌ஷன் மற்றும் லைக்கள் மட்டுமே வழங்க முடியும்.

மேலும் சேனல் பின் தொடர்பாளர்களாக இல்லாதிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த சேனலில் இருந்து எந்தவொரு செய்திகளையும் பெற முடியாது.

இதேவேளை ஏற்கனவே டெலிகிராமில் இது போன்ற அம்சம் அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...