Newsஉயிரற்ற உடலுடன் ஒன்றாக வசித்த நபர்

உயிரற்ற உடலுடன் ஒன்றாக வசித்த நபர்

-

அமெரிக்காவின் சிப்சி என்ற சிறிய நகரில் வசிக்கும் 61 வயதுடைய லியாண்ட்ரூ ஸ்மித் ஜூனியர் என்பவர் குடும்ப உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த போதிலும் அந்த தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் அவரது உடலுடன் ஒன்றாக வசித்துள்ளார்.

தகவலை அறிந்த பொலிஸார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் உடலை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் அவரை கைது செய்து, சிறைக்கு அனுப்பி விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், அந்த நபர் உயிரிழந்து எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளன மற்றும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய பிற விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் மனித உடலை இதுபோன்று நடத்துவது குடும்ப உணர்வுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடிய சட்டவிரோத செயலாகும்.

அந்த நபரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகளை பற்றி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...