Newsசமூகத்தில் பரவும் போலி வாட்ஸ்அப் - பயனர்களுக்கு எச்சரிக்கை

சமூகத்தில் பரவும் போலி வாட்ஸ்அப் – பயனர்களுக்கு எச்சரிக்கை

-

இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் போலி வாட்ஸ்அப் குறித்து கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இது குறித்த ஒரு போலியான லிங்க் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் சமீபத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

மோசடி செய்பவர்கள் பலருக்கு இந்த இணைப்பை வாட்ஸ்அப் மூலமாகவே அனுப்புகிறார்கள். இந்நிலையில் பிங்க் வாட்ஸ்அப்புக்கான Link-ஐ கிளிக் செய்யவோ அல்லது பிங்க் வாட்ஸ்அப் ஆப்பை பதிவிறக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது மால்வேர்(malware) மென்பொருள். இதன் மூலம் உங்கள் தொலைபேசியை ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பைக் கிளிக் செய்பவர்களின் தொடர்பு எண்கள் மற்றும் சேமிக்கப்பட்ட படங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும்.

இதனால் நிதி இழக்கப்படலாம், ஸ்பேம் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் மற்றும் தொலைபேசி சாதனங்களின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழக்க நேரிடும்.

இதில் இருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது, மொபைலில் பதிவிறக்கம் செய்த போலியான செயலியை உடனடியாக நீக்க (uninstall) வேண்டும்.

அதிகாரப்பூர்வ Google Play Store, iOS App Store அல்லது முறையான இணையதளங்களிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...