Newsசமூகத்தில் பரவும் போலி வாட்ஸ்அப் - பயனர்களுக்கு எச்சரிக்கை

சமூகத்தில் பரவும் போலி வாட்ஸ்அப் – பயனர்களுக்கு எச்சரிக்கை

-

இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் போலி வாட்ஸ்அப் குறித்து கடுமையான எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இது குறித்த ஒரு போலியான லிங்க் உள்ளடக்கிய ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் சமீபத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

மோசடி செய்பவர்கள் பலருக்கு இந்த இணைப்பை வாட்ஸ்அப் மூலமாகவே அனுப்புகிறார்கள். இந்நிலையில் பிங்க் வாட்ஸ்அப்புக்கான Link-ஐ கிளிக் செய்யவோ அல்லது பிங்க் வாட்ஸ்அப் ஆப்பை பதிவிறக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது மால்வேர்(malware) மென்பொருள். இதன் மூலம் உங்கள் தொலைபேசியை ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பைக் கிளிக் செய்பவர்களின் தொடர்பு எண்கள் மற்றும் சேமிக்கப்பட்ட படங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும்.

இதனால் நிதி இழக்கப்படலாம், ஸ்பேம் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் மற்றும் தொலைபேசி சாதனங்களின் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக இழக்க நேரிடும்.

இதில் இருந்து விடுபட முதலில் செய்ய வேண்டியது, மொபைலில் பதிவிறக்கம் செய்த போலியான செயலியை உடனடியாக நீக்க (uninstall) வேண்டும்.

அதிகாரப்பூர்வ Google Play Store, iOS App Store அல்லது முறையான இணையதளங்களிலிருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...