Sports33-வது ஒலிம்பிக் போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

33-வது ஒலிம்பிக் போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

-

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26 ஆம் திகதி முதல் ஒகஸ்டு 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் தீபம் தொடக்க விழாவின் போது போட்டி இடம்பெறும் மைதானத்தில் உள்ள பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது முக்கிய நிகழ்வாகும்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம், ஒலிம்பிக் போட்டி தோன்றிய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி ஏற்றப்படுகிறது.

கிரீஸ் நாட்டில் 9 நாட்கள் பயணிக்கும் ஒலிம்பிக் தீபம் ஏதென்ஸ் சென்று அங்கிருந்து பெலோம் என்ற கப்பல் மூலம் பிரான்சின் மார்செய்ல் துறைமுகத்துக்கு மே 8 ஆம் திகதி சென்றடைகின்றது.

ஒலிம்பிக் தீபம் பயணிக்கும் விவரத்தை அறிவித்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழு தலைவர் டோனி எஸ்டான்குவெட் இது குறித்து தெரிவிக்கையில்,

‘2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் 16 ஆம் திகதி ஏற்றப்படும் ஒலிம்பிக் தீபம் மே 8 ஆம் திகதி பிரான்ஸ் வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் புரதான இடங்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட நகரங்களில் 68 நாட்கள் ஒலிம்பிக் தீபம் பயணிக்கிறது.

அத்துடன் வெளிநாடுகளுக்கும் எடுத்து செல்லப்படும். ஒலிம்பிக் தீபத்தை எடுத்து செல்லும் நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வாகனம் ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 80 தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை இழக்க நேரிடும் என்று மாநில காவல்துறை கூறுகிறது. தொலைபேசிகளை பயன்படுத்தும்...

அமெரிக்கா McDonald’s உணவகங்கள் மூலம் கொடிய பாக்டீரியா தொற்று

அமெரிக்காவில் உள்ள McDonald's உணவகங்கள் மூலம் கொடிய E. coli பாக்டீரியா தொற்று பரவியதால் 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் E. coli நோய்த்தொற்றுகள்...

முதல் முறையாக நிர்வாண மண்டலமாக மாறும் பிரிஸ்பேர்ண் Story Bridge

பிரிஸ்பேர்ணின் பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரிஸ்பேர்ண் Story Bridge-ஐ நிர்வாண மண்டலமாக மாற்றும் வேலைத்திட்டம் இன்று நடைபெறுகிறது. உலகின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான ஸ்பென்சர் டுனிக்...

குயின்ஸ்லாந்து பிரதமர் பதவியை இழப்பாரா?

குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி லிபரல் கட்சி வெற்றி பெற்று...

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வாகனம் ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 80 தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை இழக்க நேரிடும் என்று மாநில காவல்துறை கூறுகிறது. தொலைபேசிகளை பயன்படுத்தும்...

ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புவோருக்கு 5 நிலைகளில் ஆலோசனை

அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியைத் திட்டமிடுபவர்களுக்கு ஆஸ்திரேலிய கல்வி அமைச்சு தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நாட்டில் கல்வி கற்க 5 படி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புத்...