Sports33-வது ஒலிம்பிக் போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

33-வது ஒலிம்பிக் போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

-

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்த ஆண்டு (2024) ஜூலை 26 ஆம் திகதி முதல் ஒகஸ்டு 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் தீபம் தொடக்க விழாவின் போது போட்டி இடம்பெறும் மைதானத்தில் உள்ள பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது முக்கிய நிகழ்வாகும்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம், ஒலிம்பிக் போட்டி தோன்றிய கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி ஏற்றப்படுகிறது.

கிரீஸ் நாட்டில் 9 நாட்கள் பயணிக்கும் ஒலிம்பிக் தீபம் ஏதென்ஸ் சென்று அங்கிருந்து பெலோம் என்ற கப்பல் மூலம் பிரான்சின் மார்செய்ல் துறைமுகத்துக்கு மே 8 ஆம் திகதி சென்றடைகின்றது.

ஒலிம்பிக் தீபம் பயணிக்கும் விவரத்தை அறிவித்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பு குழு தலைவர் டோனி எஸ்டான்குவெட் இது குறித்து தெரிவிக்கையில்,

‘2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் 16 ஆம் திகதி ஏற்றப்படும் ஒலிம்பிக் தீபம் மே 8 ஆம் திகதி பிரான்ஸ் வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் புரதான இடங்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட நகரங்களில் 68 நாட்கள் ஒலிம்பிக் தீபம் பயணிக்கிறது.

அத்துடன் வெளிநாடுகளுக்கும் எடுத்து செல்லப்படும். ஒலிம்பிக் தீபத்தை எடுத்து செல்லும் நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஒரு படகில் தனியாக விடப்பட்ட 8 நாய்கள்

கோல்ட் கோஸ்ட்டில் நங்கூரமிடப்பட்ட ஒரு கப்பலில் எட்டு நாய்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து விலங்கு பாதுகாப்பு அமைப்பு ஒன்று விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும்...

குழந்தைகள் உரிமைகள் அதிகமாக மீறப்படும் நாடு எது தெரியுமா?

குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கையின்படி, இஸ்ரேல் அதிக குழந்தைகள் உரிமை மீறல் விகிதத்தைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. இஸ்ரேலுக்கு...

NSW-வில் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த ஓட்டுநர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் மின்னணு சாதனங்களில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது குற்றம்...

ஜூலை 1 முதல் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

ஆஸ்திரேலியர்கள் தங்கள் பணத்தைச் சேமித்துச் செலவிடும் விதத்தில் பரவலான மாற்றங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகின்றன. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பொதுவாக புதிய நிதியாண்டை...

மொத்தமாக பில்லிங் செய்யும் GP அணுகலுக்கு ஆஸ்திரேலியாவின் மோசமான நகரங்களில் ஒன்றாக பிரிஸ்பேர்ண்

ஆஸ்திரேலியாவில் முதன்மை பராமரிப்பு (GP) சேவைகளுக்கு மிக மோசமான நகரங்களில் ஒன்றாக பிரிஸ்பேர்ண் பெயரிடப்பட்டுள்ளது. மொத்தமாக கட்டணம் வசூலிக்கக்கூடிய சுகாதார சேவைகளைப் பெறுவதில் உள்ள சிரமமே இதற்குக்...

NSW-வில் சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த ஓட்டுநர் கைது

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் மின்னணு சாதனங்களில் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது குற்றம்...