News36 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை சிசுக்களை சுமந்த ஆண் - அதிர்ச்சியில்...

36 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை சிசுக்களை சுமந்த ஆண் – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

-

நாக்பூரை சேர்ந்த நபர் ஒருவர் தான் கர்பமாக இருப்பதை அறியாமல் 36 ஆண்டுகளுக்கும் மேலாக இரட்டை சிசுவை தனது வயிற்றில் சுமந்து வாழ்ந்துள்ளார்.

நாக்பூரில் பிறந்த சஞ்சு பகத் அவரது பெரிய வயிற்றின் காரணமாக ‘கர்ப்பிணி’ என்று அவரது ஊர் மக்களால் கேலி கிண்டலுக்கு உள்ளானவர்.

உண்மையில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், 36 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது சொந்த இரட்டை உடன்பிறப்புகள் அவரது வயிற்றில் வாழ்ந்திருக்கிறார்கள்.

சஞ்சு பகத் சிறுவனாக இருந்தபோது, அவரது வயிறு மிகவும் சிறியதாக இருந்ததாகவும்,ஆனால் அவருக்கு 20 வயது ஆனபோது வயிறு வேகமாக வளர்ந்துள்ளது.

ஆனால் அதை கண்டுகொள்ளாத சஞ்சு பகத்,ஒரு கட்டத்தில் மூச்சு விடுவதற்கே பெரும் அவதிப்பட்டுள்ளார்.

பின்னர் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்ட நிலையில் , முதலில் அவரது வயிற்றில் பெரிய கட்டி இருப்பதாக நினைத்த நிலையில்,பின்னர் அறுவை சிகிச்சையின் போது தான் தெரியவந்திருக்கிறது அவரது வயிற்றில் நிறைய எலும்புகள் மற்றும் சதைகள் வளர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் பின்னர் உள்ளே பரிசோதித்தபோது கை,கால்கள், பிறப்புறுப்பின் சில பகுதிகள், தாடைகள் ஆகியவற்றைக் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

அவரது வயிற்றில் கருவுக்குள் கரு உருவாகி இரட்டை ஆண் சிசு இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத் துறையில் மிகவும் அரிதான நிகழ்வு என தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து சஞ்சு பகத்திற்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை சிசு அகற்றப்பட்ட நிலையில்,கிடைகப்பெற்ற கை கால்கள், தலை முடி, பிறப்புறுப்பு என உடற்பாகங்களை பார்க்க சஞ்சு பகத் மறுத்துவிட்டார்.

கடந்த 36 ஆண்டுகளுக்கு மேல் சஞ்சு பகத் தனது வயிற்றுக்குள் இரட்டை ஆண் சிசுவை சுமந்து வாழ்ந்துள்ளது மருத்துவத்துறையில் மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருவில் கரு என்பது மிகவும் அரிதான ஒன்று என்றும் இது லட்சத்தில் ஒருவருக்கு தான் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சஞ்சு பகத் நலமுடன் இருப்பதாகவும் தனது அன்றாட வேளைகளில் அவர் சிரமமின்றி ஈடுபட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ரொக்க விகிதக் குறைப்பு குறித்து முக்கிய 4 வங்கிகள் கூறுவது என்ன?

ஆஸ்திரேலியாவில் உள்ள நான்கு முக்கிய வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பை பிற வங்கிகளுக்கும் அனுப்புவதாக உறுதியளித்துள்ளன. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வட்டி விகிதக் குறைப்பை ரிசர்வ்...

REDcycle பேரழிவு தரும் தவறுக்குப் பிறகு ACCC முன்மொழிந்துள்ள புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான மற்றொரு புதிய திட்டமாக மென்மையான பிளாஸ்டிக் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், Woolworths, Coles, Aldi, Nestlé, Mars மற்றும் McCormick...

பாலியல் ரீதியாக பரவும் நோய் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக பரவும் நோயால் ஏற்படும் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் 37 குழந்தைகள்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

மீண்டும் திறக்கப்பட்ட மெல்பேர்ண் Star Observation Wheel

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த Star Observation சக்கரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய உரிமையாளர்கள் இது MB Star Properties Pty Ltd...

கான்பெராவிற்குத் திரும்பும் Hydrotherapy நீர் குளம்

தெற்கு கான்பெராவில் உள்ள Hydrotherapy நீர் குளத்தை ஆகஸ்ட் 25 ஆம் திகதி பொதுமக்களுக்கு திறக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. Greenway-இல் உள்ள Lakeside Leisure Centre-இற்கு...