Sportsபெண்கள் ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி

பெண்கள் ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா அசத்தல் வெற்றி

-

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இடம்பெற்றது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலியா 473 ஓட்டங்களும், இங்கிலாந்து 463 ஓட்டங்களும் எடுத்தன.

10 ஓட்டம் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ஓட்டங்கள் எடுத்திருந்தது. போப் லிட்ச் பீல்ட், பெத் மூனி களத்தில் இருந்தனர்.

இதையடுத்து நேற்று நடைபெற்ற 4-வது நாளில் அவுஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சில் 78.5 ஓவர்களில் 257 ஓட்டங்களில் ஒல் அவுட்டானது.

இதையடுத்து 268 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.

நேற்றைய 4-வது நாள் போட்டிநேர முடிவில் இங்கிலாந்து அணி 28 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் டேனி வியாட் 20 ஓட்டத்துடனும் கேட் கிராஸ் 5 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 5-வது நாள் போட்டி இன்று நடைபெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய பெண்கள் அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

அவுஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நன்றி தமிழன்

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...