Newsவாடகைத் தாய் மூலம் பிறந்த கன்றுக்குட்டி!

வாடகைத் தாய் மூலம் பிறந்த கன்றுக்குட்டி!

-

நாட்டிலேயே முதல் முறையாக வாடகைத் தாய் முறையில் கன்றுகுட்டி ஒன்று பிறந்துள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் ஓங்கோல் பசு ஒன்று வாடகைத்தாய் போன்ற முறையில் சாகிவால் நாட்டு இனத்தை சேர்ந்த கிடாரி கன்று ஒன்றை பிரசவித்துள்ளது. அதற்கு பத்மாவதி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் இருந்து அதிக பால் உற்பத்தி கொடுக்கும் நாட்டு பசுக்கள் பலவற்றை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலைக்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.

அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயர்ரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி தேவஸ்தான கோசாலையில் வளர்த்து வருகின்றனர். இது போல் பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் தற்போது தேவஸ்தான கோசாலையில் கர்ப்பமாக உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர்ரக சாகிவால் கிடாரி கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 10 பசுக்கள் சாகிவால் இனத்தைச் சேர்ந்த கிடாரி கன்றுகளை ஈன்றெடுக்க உள்ளன.

தேவஸ்தானத்தின் கோசாலையில் தினமும் 4000 லிட்டர் பால் உற்பத்தி செய்யவும், 60 கிலோ உயர்ரக நாட்டு பசு வெண்ணை தயார் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜகவர் ரெட்டி ஆலோசனையின் பேரில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...