Newsதெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

தெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

-

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுவரை வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா? கடந்த சில நாட்களாக, வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வருவதாக கூறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு (Call) செய்வதே கடினமாகத்தான் இருக்கும். மேலும் இதற்கான கட்டணமும் அதிகம். ஆனால், இவை அனைத்தையும் இப்போது வாட்ஸ்அப் எளிதாக்கிவிட்டது.

ஆனால் சமீப காலமாக, வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு வியட்நாம், மலேசியா, கென்யா போன்ற நாடுகளில் உள்ள தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் மூலம் சைபர்கிரைம் அதிகரித்து வருவதாக பிற நாடுகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு தீர்வாக மெட்டா நிறுவனம் ஹசைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ (Silence Unknown Callers) என்ற வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.

இந்த வசதியில் ஏதாவது தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அதற்கான ரிங்டோன் எதுவும் உங்களுக்கு வராது. அதற்குப் பதிலாக அந்த அழைப்பு வந்ததற்கான தகவல் ஹநோட்டிபிகேஷன்’ பிரிவில் மட்டும் இருக்கும். இதன்மூலம் தெரியாத அழைப்புகளின் தொந்தரவுகளை நீங்கள் எளிதாகத் தவிர்க்கலாம்.

இந்த வசதிக்கு…

வாட்ஸ்அப்புக்குள் செல்லுங்கள்

வலது ஓரத்தில் இருக்கும் ‘மெனு’வை க்ளிக் செய்யுங்கள்

பிறகு ‘Settings > Privacy > Calls’-ஐ தேர்ந்தெடுங்கள்

Calls-ல் இருக்கும் Silence Unknown Callers-யை ‘enable’ செய்துவிடுங்கள்

இனி உங்களுக்கு எந்த தெரியாத வாட்ஸ்அப் போன்காலும் வராது மக்களே!

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...