Newsதெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

தெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

-

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுவரை வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா? கடந்த சில நாட்களாக, வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வருவதாக கூறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு (Call) செய்வதே கடினமாகத்தான் இருக்கும். மேலும் இதற்கான கட்டணமும் அதிகம். ஆனால், இவை அனைத்தையும் இப்போது வாட்ஸ்அப் எளிதாக்கிவிட்டது.

ஆனால் சமீப காலமாக, வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு வியட்நாம், மலேசியா, கென்யா போன்ற நாடுகளில் உள்ள தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் மூலம் சைபர்கிரைம் அதிகரித்து வருவதாக பிற நாடுகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு தீர்வாக மெட்டா நிறுவனம் ஹசைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ (Silence Unknown Callers) என்ற வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.

இந்த வசதியில் ஏதாவது தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அதற்கான ரிங்டோன் எதுவும் உங்களுக்கு வராது. அதற்குப் பதிலாக அந்த அழைப்பு வந்ததற்கான தகவல் ஹநோட்டிபிகேஷன்’ பிரிவில் மட்டும் இருக்கும். இதன்மூலம் தெரியாத அழைப்புகளின் தொந்தரவுகளை நீங்கள் எளிதாகத் தவிர்க்கலாம்.

இந்த வசதிக்கு…

வாட்ஸ்அப்புக்குள் செல்லுங்கள்

வலது ஓரத்தில் இருக்கும் ‘மெனு’வை க்ளிக் செய்யுங்கள்

பிறகு ‘Settings > Privacy > Calls’-ஐ தேர்ந்தெடுங்கள்

Calls-ல் இருக்கும் Silence Unknown Callers-யை ‘enable’ செய்துவிடுங்கள்

இனி உங்களுக்கு எந்த தெரியாத வாட்ஸ்அப் போன்காலும் வராது மக்களே!

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...

பராக் மற்றும் மிஷேல் ஒபாமாவை அவமதிக்கும் வீடியோவைப் பகிர்ந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியைப் பகிர்ந்து,...

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...