Newsதெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

தெரியாத இலக்கத்தில் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தால் இனி இதை செய்யுங்கள்

-

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுவரை வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து உங்களுக்கு அழைப்பு வந்திருக்கிறதா? கடந்த சில நாட்களாக, வாட்ஸ்அப்பில் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வருவதாக கூறும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு (Call) செய்வதே கடினமாகத்தான் இருக்கும். மேலும் இதற்கான கட்டணமும் அதிகம். ஆனால், இவை அனைத்தையும் இப்போது வாட்ஸ்அப் எளிதாக்கிவிட்டது.

ஆனால் சமீப காலமாக, வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு வியட்நாம், மலேசியா, கென்யா போன்ற நாடுகளில் உள்ள தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் மூலம் சைபர்கிரைம் அதிகரித்து வருவதாக பிற நாடுகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு தீர்வாக மெட்டா நிறுவனம் ஹசைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ (Silence Unknown Callers) என்ற வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.

இந்த வசதியில் ஏதாவது தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால், அதற்கான ரிங்டோன் எதுவும் உங்களுக்கு வராது. அதற்குப் பதிலாக அந்த அழைப்பு வந்ததற்கான தகவல் ஹநோட்டிபிகேஷன்’ பிரிவில் மட்டும் இருக்கும். இதன்மூலம் தெரியாத அழைப்புகளின் தொந்தரவுகளை நீங்கள் எளிதாகத் தவிர்க்கலாம்.

இந்த வசதிக்கு…

வாட்ஸ்அப்புக்குள் செல்லுங்கள்

வலது ஓரத்தில் இருக்கும் ‘மெனு’வை க்ளிக் செய்யுங்கள்

பிறகு ‘Settings > Privacy > Calls’-ஐ தேர்ந்தெடுங்கள்

Calls-ல் இருக்கும் Silence Unknown Callers-யை ‘enable’ செய்துவிடுங்கள்

இனி உங்களுக்கு எந்த தெரியாத வாட்ஸ்அப் போன்காலும் வராது மக்களே!

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...