Newsஇந்திய வம்சாவளி பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

-

இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையில் சிறுவனிடமிருந்து அதிக அளவிலான கொகெயின், ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் சிறுவன், சிறுமிகள் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்த 6 பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலில் 28 வயதான இந்திய வம்சாவளி பெண்ணான சரினா துஹல் என்ற பெண்ணும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த 6 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...