Sportsமுதல்முறையாக விண்வெளியில் அறிமுகமாகும் உலக கிண்ணம்

முதல்முறையாக விண்வெளியில் அறிமுகமாகும் உலக கிண்ணம்

-

13-வது உலக கிண்ண கிரிக்கெட் இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. உலக கிண்ண கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து , அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச்சுற்று போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் 2 அணிகள் உலக கிண்ண போட்டியில் விளையாடும். இந்த போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் உலக கிண்ண போட்டியை பிரபலப்படுத்த ICC புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அது என்னவென்றால் உலக கிண்ண டிராபியை பிரத்யேக பலூனில் வைத்து பூமியில் இருந்து சுமார் 1.20 இலட்சம் அடி உயரத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் கிண்ணம் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று முதல் 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கிண்ணம் வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும்.

முதல்முறையாக விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட கிண்ணம் என்ற பெருமையை ICC ஒருநாள் உலக கிண்ணம் பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...