Sportsமுதல்முறையாக விண்வெளியில் அறிமுகமாகும் உலக கிண்ணம்

முதல்முறையாக விண்வெளியில் அறிமுகமாகும் உலக கிண்ணம்

-

13-வது உலக கிண்ண கிரிக்கெட் இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த போட்டிகள் ஒக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. உலக கிண்ண கிரிக்கெட்டில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து , அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.

மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச்சுற்று போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் 2 அணிகள் உலக கிண்ண போட்டியில் விளையாடும். இந்த போட்டிக்கான அட்டவணை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் உலக கிண்ண போட்டியை பிரபலப்படுத்த ICC புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அது என்னவென்றால் உலக கிண்ண டிராபியை பிரத்யேக பலூனில் வைத்து பூமியில் இருந்து சுமார் 1.20 இலட்சம் அடி உயரத்தில் வளிமண்டலத்தின் விளிம்பில் கிண்ணம் நிலை நிறுத்தப்பட்டது.

இன்று முதல் 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கிண்ணம் வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு திரும்பும்.

முதல்முறையாக விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்ட கிண்ணம் என்ற பெருமையை ICC ஒருநாள் உலக கிண்ணம் பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...