Newsசட்டத்தின் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொண்ட 23 வயது தெற்கு ஆஸ்திரேலியப்...

சட்டத்தின் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொண்ட 23 வயது தெற்கு ஆஸ்திரேலியப் பெண்

-

தெற்கு ஆஸ்திரேலிய இளம் பெண் ஒருவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலத்தின் voluntary assisted dying laws- துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல் சட்டங்களைப் பயன்படுத்தி உயிர்துறந்துள்ளார்.

தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 23 வயதான Lily Thai என்ற பெண், Ehlers-Danlos Syndrome, Autoimmune autonomic ganglionopathy போன்ற குணப்படுத்த முடியாத நோய்நிலைமைகளின் காரணமாக தனது வாழ்நாளின் பல வருடங்களை வலியுடன் கழித்திருந்த பின்னணியில், துன்பமற்ற மரணத்திற்கு உதவுதல் அதாவது கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்தி கடந்த புதன்கிழமை உயிர்துறந்தார்.

இனிமேலும் வலியைப் பொறுக்கமுடியாது என்பதால் தெற்கு ஆஸ்திரேலியாவின் கருணைக்கொலைச் சட்டங்களைப் பயன்படுத்த திட்டமிட்டதாகவும், நோயினால் தான் அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுபட ஆவலுடன் காத்திருப்பதாகவும் அந்த இளம் பெண் தெரிவித்திருந்தார்.

தனது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இது எவ்வளவு கடினமாக இருக்கும் என்று தனக்குத் தெரியும் என்றபோதிலும், எது சரியானது என்பதைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இதுவெனவும், தான் அமைதியாக இறக்க வேண்டும் என்பதே தனது தெரிவு எனவும் அவர் கூறினார்.

Lily Thai, நடப்பது சாப்பிடுவது உட்பட எந்தவொரு செயலையும் தானாகச் செய்ய முடியாதநிலையில், மற்றவர்களை நம்பியே வாழ வேண்டியிருந்ததாகவும், 17 வயதிலிருந்து கடந்த 6 வருடங்களாக அதிகளவான நாட்களை மருத்துவமனையிலேயே கழித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...