Newsஅமெரிக்காவிற்கு 800 இந்தியர்களை அழைத்து சென்ற நபருக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவிற்கு 800 இந்தியர்களை அழைத்து சென்ற நபருக்கு நேர்ந்த கதி

-

அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி நபர் ரஜிந்தர் பால் சிங் என்ற ஜஸ்பால் கில் (வயது 49). இவர், கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை அழைத்து சென்றதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இந்த செயலில் ஈடுபட்ட கும்பலில் முக்கிய நபராக விளங்கிய ஜஸ்பால் கில், அதன் மூலம் 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சவாரிக்கான உபேர் செயலியை பயன்படுத்தி, இந்தியர்களை அமெரிக்காவிற்குள் இவர் வாகனங்களில் அழைத்துச்சென்றதும் தெரியவந்துள்ளது. சுமார் 4 ஆண்டுகாலமாக இது இடம்பெற்று வந்துள்ளதாக அறியப்படுகின்றது.

கலிபோர்னியாவில் உள்ள ஜஸ்பால் கில்லின் வீட்டில் சோதனையிட்ட விசாரணை அதிகாரிகள், அங்கிருந்து 45 ஆயிரம் டொலர் ரொக்கம், போலியான ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட ஜஸ்பால் கில், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, ஜஸ்பால் கில்லுக்கு 45 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

ஜஸ்பால் கில்லும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத்தான் வசித்து வந்துள்ளார்.

எனவே ,அவர் சிறை தண்டனைக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...