Newsஜப்பானில் இரத்த சிவப்பு நிறமாக மாறிய நதியால் அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஜப்பானில் இரத்த சிவப்பு நிறமாக மாறிய நதியால் அதிர்ச்சியில் பொதுமக்கள்

-

ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட மக்களும், பார்வையாளர்களும் அச்சமடைந்தனர்.

அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உணவுகளில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.

அதேசமயம், மிகப் பெரிய பிரச்சனை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எங்கள் தொழிற்சாலையில் குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் நீரில், உணவு சுகாதாரச் சட்டத்தின் அமலாக்க விதிமுறைகளில் பட்டியலிடப்பட்டுள்ள புரோபிலீன் கிளைகோல் எனப்படும் உணவு சேர்க்கைக்கான பொருள் இருக்கிறது.

குளிர்விக்கும் நீரில் உள்ள அது கசிந்ததும், அந்த நீர், மழைநீர் வடிகாலின் வழியாக நதியில் கலந்து நதி நீர் சிவப்பு நிறமாக மாறி விட்டது’ என்று ஓரியன் ப்ரூவரிஸ் கூறியுள்ளது.

கசிவு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக நிறுவனத்தின் தலைவர் ஹஜிம் முரானோ தெரிவித்தார்.

இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். அழகு சாதன தொழில்களில் பெருமளவில் பயன்படுத்தப்படும் இந்த பொருள் பொதுவாக பாதுகாப்பானது என்று அமெரிக்க நச்சுப் பொருட்கள் மற்றும் நோய்ப் பதிவேடு முகமை தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகளால் இந்த ரசாயனம் குளிர்விக்கும் செயல்பாட்டில் உணவு சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது.

Latest news

டிரம்பின் கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக உள்ள சர்வதேச மாணவர் கட்டுப்பாடுகள்

சர்வதேச மாணவர்கள் மீதான ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அமெரிக்க கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வரிகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Deepfake Photo செயலிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகளுக்கு Nudify செயலிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் Deepfake படங்கள் பற்றிய அறிக்கைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக...

ஆஸ்திரேலிய பணியிடங்களில் அதிகரித்துள்ள சுய பரிசோதனை மருந்து கருவிகளுக்கான தேவை

ஆஸ்திரேலிய பணியிடங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், தனிப்பட்ட போதைப்பொருள் சுய பரிசோதனை கருவிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, cocaine,...

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலை சிங்கத்தால் கையை இழந்த பெண்

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலையில் சிங்கம் தாக்கியதில் 50 வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் Toowoomba-இற்கு அருகிலுள்ள பிரபலமான...

பிரபல சமையல்காரர் Peter Russell-Clarke காலமானார்

அன்புடன் சமைக்கும் கலையைக் கற்றுக் கொடுத்த பிரபல சமையல்காரர் Peter Russell-Clarke காலமானார். அவர் இறக்கும் போது 89 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. Peter Russell-Clarke ஒரு சமையல்காரர்,...

சிறப்பு உணவுகளின் விலைகளை உயர்த்தும் இரு பெரிய பல்பொருள் அங்காடிகள்

Coles மற்றும் Woolworths-இல் விற்கப்படும் பிரபலமான பிரதான உணவான paprikaவின் விலை அதிகரிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் மிளகுத்தூளின் மொத்த விலை சுமார்...