Newsஆஸ்திரேலியாவில் வாகன, சொத்து திருட்டுகள் தொடர்ந்து 2வது ஆண்டாக அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வாகன, சொத்து திருட்டுகள் தொடர்ந்து 2வது ஆண்டாக அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் வாகனத் திருட்டுகள் மற்றும் சொத்துக் கொள்ளைகள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகரித்துள்ளன.

புள்ளிவிபரப் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாகனத் திருட்டு 11 சதவீதமும், சொத்து திருட்டு 09 சதவீதமும், சில்லறை விற்பனைக் கடை திருட்டு 08 சதவீதமும் அதிகரித்துள்ளது.

மேலும், கோவிட் தொற்றுநோய்களின் போது குறைந்திருந்த பாலியல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு மீண்டும் அதிகரித்துள்ளது.

இருப்பினும், 2021 உடன் ஒப்பிடும்போது, ​​விக்டோரியா மாநிலத்தில் பாலியல் வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளது.

ஆனால், குயின்ஸ்லாந்து – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் வடக்குப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், முந்தைய ஆண்டுகளை விட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...