Newsநியூயோர்க் நகரின் மீது படையெடுத்த பூச்சிகள் கூட்டம்

நியூயோர்க் நகரின் மீது படையெடுத்த பூச்சிகள் கூட்டம்

-

அமெரிக்காவின் நியூயோர்க் நகர குடியிருப்புவாசிகளை அளவில் மிகச்சிறிய பூச்சிகளின் கூட்டம் திண்டாட வைத்திருக்கிறது.

சுமார் மூன்று நாட்களாக நியூயார்க்கின் மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளின் பகுதிகளை சுற்றி பெருமளவில் தோன்றிய இந்த சிறிய பூச்சிகள் சாலையில் செல்பவர்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இடையூறாக இருக்கின்றன.

நியூயோர்க் நகர சுரங்கப்பாதைகளிலும் இந்த பூச்சிகள் கூட்டம் ஊடுருவியுள்ளது. இது குறித்து சிட்டி பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநரான பேராசிரியர் டேவிட் லோமன், ‘இந்த பூச்சிகள், சிறகுகள் கொண்ட அஃபிட்ஸ் (aphids) வகை பூச்சி என்றும், அவை க்னாட்ஸ் (gnats- – ஒருவகை கொசு) அல்ல’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த திடீர் அஃபிட்ஸ் தாக்குதல் அபூர்வமானது என்றாலும், இது வானிலை மாற்றத்தின் விளைவு என்று புகழ்பெற்ற கார்னெல் பல்கலைக்கழகத்தின் டொக்டர் கோரி மோரோ தெரிவித்துள்ளார்.

இந்த பூச்சிகளால் பொது சுகாதார அபாயம் எதுவுமில்லை என்று நியூயோர்க் நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், ஏதேனும் முக்கியமான சுகாதார தகவலிருந்தால் அதனை பகிர்ந்து கொள்வோம் நியூயோர்க் நகர சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...