NoticesTamil Community Eventsஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மாத்தளையில் ஆரம்பம்

ஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மாத்தளையில் ஆரம்பம்

-

ஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஐயமிட்டுன் அமைப்பின ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களின் எண்ணக்கருவில், மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலய தர்மகர்த்தா திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் பெருமுயற்சியில், மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் மாத்தளை மாவட்டத்தின் மூன்றாவது மற்றும் மாத்தளை ஆலய கட்டமைப்புக்குள் முதலாவது மின்வழிக்கற்கை நிலையம் (Digital Education Centre) கடந்த 03/07/2023 ஆம் திகதி மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலயத்தில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இப்பிரதேசத்தினை அண்டி வாழும் தமிழ் மாணவர்களின் சமய கற்கை மட்டுமன்றி கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில கற்கை தேர்ச்சியையும் இந்த மின்வழிக்கற்கை உறுதி செய்யும். இது மின்வழிக்கற்கை நிலையமாக மாத்திரம் அல்லாமல் விழுமியங்கள் மற்றும் தொழில் கற்கைகளை வழங்கும் கேந்திர நிலையமாகவும் செயற்படவுள்ளது.

மேலும் இந்த நிகழ்வில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் புதிய பாலர் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது ஒரு SMART பாலர் பாடசாலையாக அமையவுள்ளது.

இந்த நிலையத்தின் தொழில்நுட்ப, கண்காணிப்பு, முகாமைத்துவ மற்றும் அறிவு வள தேவைகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது. இந்த நிகழ்வில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் சார்பாக தலைமை ஆலோசகர் Dr. சுமணேந்திரன், இயக்குனர் திரு. ரவிசங்கர் மற்றும் ஆலோசகர் திரு. சுந்தரலிங்கம் அவர்கள், அங்கத்தவர்கள் திரு. நிரோஷன் மற்றும் திரு. ரிதுர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Latest news

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

வெள்ளத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முழுவதும் பரவும் மற்றுமொரு நோய்

வெள்ளத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முழுவதும் மலேரியா வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பதிவான தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 71 ஆக உயர்ந்துள்ளதாகவும், அது ஆஸ்திரேலிய...

200 ஆண்டுகள் பழமையான ஆணுறையை காட்சிப்படுத்த ஒரு சிறப்பு கண்காட்சி

நெதர்லாந்தின் Amsterdam நகரில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை சிறப்பு கண்காட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு செம்மறி ஆடுகளின் பிற்சேர்க்கையிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் ஒரு கன்னியாஸ்திரி...

200 ஆண்டுகள் பழமையான ஆணுறையை காட்சிப்படுத்த ஒரு சிறப்பு கண்காட்சி

நெதர்லாந்தின் Amsterdam நகரில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை சிறப்பு கண்காட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு செம்மறி ஆடுகளின் பிற்சேர்க்கையிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் ஒரு கன்னியாஸ்திரி...

ஈராக் சிறையில் இருந்து ஆஸ்திரேலிய பொறியாளர் விடுதலை

ஈராக்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆஸ்திரேலிய பொறியாளர் Robert Pether ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். Robert Pether Baghdad-இல் ஈராக் மத்திய வங்கியை வடிவமைத்துக்கொண்டிருந்தபோது, ​​அவரது...