NoticesTamil Community Eventsஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மாத்தளையில் ஆரம்பம்

ஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மாத்தளையில் ஆரம்பம்

-

ஆலயங்களை மையப்படுத்தி தமிழ் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஐயமிட்டுன் அமைப்பின ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களின் எண்ணக்கருவில், மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலய தர்மகர்த்தா திரு. பாலசுப்பிரமணியம் அவர்களின் பெருமுயற்சியில், மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் மாத்தளை மாவட்டத்தின் மூன்றாவது மற்றும் மாத்தளை ஆலய கட்டமைப்புக்குள் முதலாவது மின்வழிக்கற்கை நிலையம் (Digital Education Centre) கடந்த 03/07/2023 ஆம் திகதி மாத்தளை சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலயத்தில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இப்பிரதேசத்தினை அண்டி வாழும் தமிழ் மாணவர்களின் சமய கற்கை மட்டுமன்றி கணித, விஞ்ஞான மற்றும் ஆங்கில கற்கை தேர்ச்சியையும் இந்த மின்வழிக்கற்கை உறுதி செய்யும். இது மின்வழிக்கற்கை நிலையமாக மாத்திரம் அல்லாமல் விழுமியங்கள் மற்றும் தொழில் கற்கைகளை வழங்கும் கேந்திர நிலையமாகவும் செயற்படவுள்ளது.

மேலும் இந்த நிகழ்வில் ஐயமிட்டுன் ஸ்தாபகர் திரு. முரளிதரன் அவர்களால் புதிய பாலர் பாடசாலை ஒன்றிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இது ஒரு SMART பாலர் பாடசாலையாக அமையவுள்ளது.

இந்த நிலையத்தின் தொழில்நுட்ப, கண்காணிப்பு, முகாமைத்துவ மற்றும் அறிவு வள தேவைகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் மேற்கொள்ளவுள்ளது. இந்த நிகழ்வில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் சார்பாக தலைமை ஆலோசகர் Dr. சுமணேந்திரன், இயக்குனர் திரு. ரவிசங்கர் மற்றும் ஆலோசகர் திரு. சுந்தரலிங்கம் அவர்கள், அங்கத்தவர்கள் திரு. நிரோஷன் மற்றும் திரு. ரிதுர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...