Newsசூரியனுக்கு மிக அருகில் நெருங்கிய நாசாவின் விண்கலம்

சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிய நாசாவின் விண்கலம்

-

பூமியில் உள்ள அனைத்து உயிர்களின் ஆற்றலுக்கான ஆதாரமாக விளங்கும் சூரியனை ஆய்வு செய்வதற்கு நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, சூரியனை மிக அருகில் சென்று ஆராயும் வகையில் ‘பார்க்கர்’ என்ற விண்கலத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 12 ஆம் திகதி விண்ணில் ஏவியது.

சூரியனில் இருந்து வெளிவரும் வெப்ப புயலுக்கான ஆதாரம், காந்த அலை செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த ஜூன் 27 ஆம் திகதி 5.3 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் சென்றதாக நாசா தெரிவித்துள்ளது.

இதுவரை சூரியனை நெருங்கிச் சென்றதிலேயே மிக நெருக்கமான தூரம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அடுத்த மாதம் 21 ஆம் திகதி வீனஸ் கிரகத்தின் ஈர்ப்பு சக்தியோடு ‘பார்க்கர்’ விண்கலம் 4.5 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனை நெருங்கிச் செல்லவுள்ளது.

தற்போது சூரியனின் வெப்ப அலை பகுதியை நெருங்கிய போதும் பாதிப்பின்றி செயல்பட்டு வரும் இந்த விண்கலம், அடுத்த மாதம் 4.5 மில்லியன் மைல் அருகில் சென்றும் பிரச்சினை இன்றி செயல்பட்டால், சூரியனின் ஆற்றலுக்கான ஆதாரம் மற்றும் செயல்பாடுகளை அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...