Newsமனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...

மனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் AI ரோபோக்கள்

-

மனிதர்களை விட உலகை எங்களால் சிறப்பாக வழிநடத்த முடியும் என ஐநாவின் உச்சிமாநாட்டில் AI ரோபோக்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் “சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு” உச்சி மாநாடு ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3000 நபர்கள் இதில் கலந்து கொண்டு AI தொழில்நுட்பத்தை எவ்வாறு கடிவாளமிட்டு, அவற்றை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்வது என்பது குறித்து ஆலோசித்தனர்.

இந்த உச்சிமாநாட்டில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

உலகமே உற்று நோக்கிய இந்த உச்சிமாநாட்டில் ஹியூமனாய்ட் ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அறையில் நிலவிய நிசப்தத்தை ஆராய்ந்த ரோபோ ஒன்று, என்ன ஒரு பதற்றத்துடன் கூடிய நிசப்தம் என்று கூறியது.

இந்த AI ரோபோக்களின் முதல் பத்தரிக்கையாளர் சந்திப்பில், ஹியூமனாய்ட் ரோபோகளை பார்த்து நீங்கள் சிறந்த தலைவர்களாக இருக்க முடியுமா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சோபியா என்ற ரோபோ, “ஹியூமனாய்ட் ரோபோக்களால், மிகுந்த செயல்திறனுடன் நிச்சயமாக சிறந்த தலைவர்களாக செயல்பட முடியும் என தெரிவித்தது.

மேலும் மற்றொரு ரோபோ பேசிய போது, எங்களுக்கு மனிதர்களை போல உணர்வுகள் இல்லை, அதனால் சில நேரங்களில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் குறுகிய காலத்தில் தரவுகளை உள்வாங்கி எங்களால் சிறப்பான முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமோகா என்ற ரோபோ மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, அதற்கு முக்கிய காரணம் மிகத் துல்லியமான மனித உருவ சாயலை ஒத்துருந்தது தான்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமோகா, செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் வளர்ச்சியை கண்டு உற்சாகமடையும் நேரத்தில், அதனை உருவாக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ நாங்கள் நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளை திருட மாட்டோம் அதே சமயம் மனிதர்களுக்கு எதிராக போராடவும் மாட்டோம் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என ஒப்புக் கொண்டது.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...