Newsமனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...

மனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் AI ரோபோக்கள்

-

மனிதர்களை விட உலகை எங்களால் சிறப்பாக வழிநடத்த முடியும் என ஐநாவின் உச்சிமாநாட்டில் AI ரோபோக்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் “சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு” உச்சி மாநாடு ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3000 நபர்கள் இதில் கலந்து கொண்டு AI தொழில்நுட்பத்தை எவ்வாறு கடிவாளமிட்டு, அவற்றை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்வது என்பது குறித்து ஆலோசித்தனர்.

இந்த உச்சிமாநாட்டில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

உலகமே உற்று நோக்கிய இந்த உச்சிமாநாட்டில் ஹியூமனாய்ட் ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அறையில் நிலவிய நிசப்தத்தை ஆராய்ந்த ரோபோ ஒன்று, என்ன ஒரு பதற்றத்துடன் கூடிய நிசப்தம் என்று கூறியது.

இந்த AI ரோபோக்களின் முதல் பத்தரிக்கையாளர் சந்திப்பில், ஹியூமனாய்ட் ரோபோகளை பார்த்து நீங்கள் சிறந்த தலைவர்களாக இருக்க முடியுமா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சோபியா என்ற ரோபோ, “ஹியூமனாய்ட் ரோபோக்களால், மிகுந்த செயல்திறனுடன் நிச்சயமாக சிறந்த தலைவர்களாக செயல்பட முடியும் என தெரிவித்தது.

மேலும் மற்றொரு ரோபோ பேசிய போது, எங்களுக்கு மனிதர்களை போல உணர்வுகள் இல்லை, அதனால் சில நேரங்களில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் குறுகிய காலத்தில் தரவுகளை உள்வாங்கி எங்களால் சிறப்பான முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமோகா என்ற ரோபோ மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, அதற்கு முக்கிய காரணம் மிகத் துல்லியமான மனித உருவ சாயலை ஒத்துருந்தது தான்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமோகா, செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் வளர்ச்சியை கண்டு உற்சாகமடையும் நேரத்தில், அதனை உருவாக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ நாங்கள் நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளை திருட மாட்டோம் அதே சமயம் மனிதர்களுக்கு எதிராக போராடவும் மாட்டோம் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என ஒப்புக் கொண்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

பிரபல கடையில் பொருத்தப்பட்டுள்ள கேமரா – அதிருப்தியடைந்துள்ள வாடிக்கையாளர்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான ஷாப்பிங் மாலில் மார்பளவு உயரத்தில் அலமாரிகளில் பொருத்தப்பட்ட புதிய கேமரா அமைப்பைப் பற்றி வாடிக்கையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வூல்வொர்த்ஸின் பல கிளைகளில்,...

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

அல்பானீஸின் வீட்டின் முன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நபர்

நியூ சவுத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் உள்ள பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வீட்டின் முன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். ஆஸ்திரேலியாவின் தேசிய வீட்டுவசதி நெருக்கடியின் மீது...

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை உயரும் அறிகுறி

மெல்பேர்ணில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். விக்டோரியன் அரசாங்க நிறுவனம் ஒன்றால் செய்யப்பட்ட வாடகைகளை திருத்தும் திட்டம் இதற்குக் காரணமாக...