Newsமனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில்...

மனிதர்களை விட உலகை சிறப்பாக வழிநடத்துவோம் என முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் AI ரோபோக்கள்

-

மனிதர்களை விட உலகை எங்களால் சிறப்பாக வழிநடத்த முடியும் என ஐநாவின் உச்சிமாநாட்டில் AI ரோபோக்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் “சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு” உச்சி மாநாடு ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3000 நபர்கள் இதில் கலந்து கொண்டு AI தொழில்நுட்பத்தை எவ்வாறு கடிவாளமிட்டு, அவற்றை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்வது என்பது குறித்து ஆலோசித்தனர்.

இந்த உச்சிமாநாட்டில் AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

உலகமே உற்று நோக்கிய இந்த உச்சிமாநாட்டில் ஹியூமனாய்ட் ரோபோக்களின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அறையில் நிலவிய நிசப்தத்தை ஆராய்ந்த ரோபோ ஒன்று, என்ன ஒரு பதற்றத்துடன் கூடிய நிசப்தம் என்று கூறியது.

இந்த AI ரோபோக்களின் முதல் பத்தரிக்கையாளர் சந்திப்பில், ஹியூமனாய்ட் ரோபோகளை பார்த்து நீங்கள் சிறந்த தலைவர்களாக இருக்க முடியுமா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சோபியா என்ற ரோபோ, “ஹியூமனாய்ட் ரோபோக்களால், மிகுந்த செயல்திறனுடன் நிச்சயமாக சிறந்த தலைவர்களாக செயல்பட முடியும் என தெரிவித்தது.

மேலும் மற்றொரு ரோபோ பேசிய போது, எங்களுக்கு மனிதர்களை போல உணர்வுகள் இல்லை, அதனால் சில நேரங்களில் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்கள் ஏற்படலாம், ஆனால் குறுகிய காலத்தில் தரவுகளை உள்வாங்கி எங்களால் சிறப்பான முடிவு எடுக்க முடியும் என தெரிவித்தது.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அமோகா என்ற ரோபோ மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, அதற்கு முக்கிய காரணம் மிகத் துல்லியமான மனித உருவ சாயலை ஒத்துருந்தது தான்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமோகா, செயற்கை நுண்ணறிவு ரோபோக்களின் வளர்ச்சியை கண்டு உற்சாகமடையும் நேரத்தில், அதனை உருவாக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ நாங்கள் நாங்கள் மனிதர்களின் வேலை வாய்ப்புகளை திருட மாட்டோம் அதே சமயம் மனிதர்களுக்கு எதிராக போராடவும் மாட்டோம் என தெரிவித்தது.

மற்றொரு ரோபோ மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை என ஒப்புக் கொண்டது.

Latest news

டிரம்பின் கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக உள்ள சர்வதேச மாணவர் கட்டுப்பாடுகள்

சர்வதேச மாணவர்கள் மீதான ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அமெரிக்க கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வரிகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Deepfake Photo செயலிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகளுக்கு Nudify செயலிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் Deepfake படங்கள் பற்றிய அறிக்கைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக...

ஆஸ்திரேலிய பணியிடங்களில் அதிகரித்துள்ள சுய பரிசோதனை மருந்து கருவிகளுக்கான தேவை

ஆஸ்திரேலிய பணியிடங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், தனிப்பட்ட போதைப்பொருள் சுய பரிசோதனை கருவிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, cocaine,...

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலை சிங்கத்தால் கையை இழந்த பெண்

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலையில் சிங்கம் தாக்கியதில் 50 வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் Toowoomba-இற்கு அருகிலுள்ள பிரபலமான...

பிரபல சமையல்காரர் Peter Russell-Clarke காலமானார்

அன்புடன் சமைக்கும் கலையைக் கற்றுக் கொடுத்த பிரபல சமையல்காரர் Peter Russell-Clarke காலமானார். அவர் இறக்கும் போது 89 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. Peter Russell-Clarke ஒரு சமையல்காரர்,...

சிறப்பு உணவுகளின் விலைகளை உயர்த்தும் இரு பெரிய பல்பொருள் அங்காடிகள்

Coles மற்றும் Woolworths-இல் விற்கப்படும் பிரபலமான பிரதான உணவான paprikaவின் விலை அதிகரிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் மிளகுத்தூளின் மொத்த விலை சுமார்...