NoticesPRISONER #1056 - சிட்னி மற்றும் மெல்பேர்னில் வசிக்கும் புத்தக...

PRISONER #1056 – சிட்னி மற்றும் மெல்பேர்னில் வசிக்கும் புத்தக நண்பர்களுக்கு சிறப்பு அழைப்பு

-

திரு. ரோய் ரத்னவேல் எழுதி கனடாவில் அதிகம் விற்பனையாகிய புத்தகம் – PRISONER #1056-ன் ஆஸ்திரேலிய வெளியீட்டு விழா பற்றிய செய்தி.

ரோய் ரத்னவேல், தமிழ் இளைஞனாக 1987ல் இலங்கையில் ஒரு அரசியல் கைதியாகி, மேலும் கொடூரமான மற்றும் கடுமையான அடக்குமுறைகளை சிறைச்சாலையில் சில மாதங்கள் கழித்தார். இலங்கையில் சித்திரவதை மற்றும் சிறையில் இருந்து தப்பி, அவரது விடுதலைக்குப் பிறகு, அவர் தனது சட்டைப் பையில் 50 டாலர்களுடன் 18 வயதில் தனியாக கனடாவுக்கு வந்தார்.

ஸ்ரீலங்காவின் கொடிய சிறையில் அரசியல் கைதியாக வதைபட்டு, தபால் அறை ஊழியரான வேலையிலிருந்து இன்று கனடாவில் மிகப்பெரிய சொத்து மேலாண்மை முதலீட்டு நிறுவனத்தின் முக்கிய அதிகாரியாக உயர்வுபெற்ற, ஒரு புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் அகதியின் உணர்வுக்கதை இது.

ரோய் ரத்னவேலின் வியக்கத்தக்க பயணம், 17வது வயதில் தொடங்கியது, அவர் ஒரு தமிழராகப் பிறந்ததைத் தவிர, வேறு எந்த காரணமும் இல்லாமல் இலங்கை அரச படைவீரர்களால் கைது செய்யப்பட்டு மோசமான சிறைமுகாமில் அடைக்கப்பட்டார்.

அவர் கண்முன், நண்பர்கள் இறப்பதைக் கண்டார், சில மாதங்கள் சித்திரவதைகளுக்கு உட்பட்ட வேளையில், ஒரு சாத்தியமில்லாத சந்திப்பு அவரை சிறைச்சுவர்களுக்கு அப்பால் ஒரு செய்தியை அனுப்ப அனுமதித்து, அது அவரை விடுவிக்கவும் வழிவகுத்தது.

தனது புத்தகத்தை வெளியிடவும், அவரது ஊக்கமளிக்கும் வளர்ச்சிப் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளவும் ஒஸ்ரேலியாவின் சிட்னிக்கும் மெல்பேனுக்கும் வருகிறார்.

ஆஸ்திரேலியா பல தமிழர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது, இவரது இந்தப் பயணம் பல சக தமிழ் அகதிகளுக்கும் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கக்கூடியதாக இருக்கும்.


SYDNEY – On July 15th, Saturday @3pm
Holroyd Centre, 11-17 Miller Street, Merrylands, NSW 2160
https://www.eventbrite.com.au/…/book-launch-prisoner…
MELBOURNE – On July 16th, Sunday @2pm
Victorian Tamil Community Hall, 44 Lonsdale Street Dandenong, VIC 3175
https://www.eventbrite.com/…/melbourne-book-launch-the..

சிட்னி மற்றும் மெல்போர்ன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள, மேலே உள்ள இணைப்புகளில் பதிவு செய்யவும், ஏனெனில் வரையறுக்கப்பட்ட இருக்கைகள் மட்டுமே உள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...