Newsவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 - இந்திய விஞ்ஞானிகள் சாதனை

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 – இந்திய விஞ்ஞானிகள் சாதனை

-

இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு விண்கலத்தைச் விண்ணில் பாய்ந்தது.

சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துகொண்டுச் சென்ற எல்பிஎம் 3- எம்4 ஏவுகணையின் இரண்டு அடுக்குகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக பிரிந்த நிலையில், தற்போது மூன்றாவது அடுக்கும் வெற்றிகரமாக பிரிந்துவிட்டது.

பிறகு வெற்றிகரமாகப் பயணித்து பூமியிலிருந்து 179 கி.மீ. தொலைவில், நீள் வட்டப்பாதையில் சந்திரயான் – 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்பும் பணிகளும், இறுதிக்கட்டப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தனர்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடா்ந்து இந்தியா மூன்றாவது முறையாக நிலவை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள இந்த முயற்சி, உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈா்த்துள்ளது.

சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுவதை நேரில் காண்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் சென்னைக்கு வியாழக்கிழமை வந்திருந்தார். அங்கிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வெள்ளிக்கிழமை சென்று ஏவுகணை ஏவுதலை நேரில் பாா்வையிட்டார்.

மற்றொரு புறம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏவுகணை ஏவுதல் நிகழ்ச்சியை இஸ்ரோ தளத்தில் முன்பதிவு செய்து நேரடியாக பார்த்தனர்.

நிலவின் தென்துருவம்: சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக மொத்தம் 3,895 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்துடன் உந்து கலன் (ப்ரபல்சன் மாட்யூல்), லேண்டா் மற்றும் ரோவா் கலன்கள் பயணிக்கின்றன.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...

$250 அபராதம் வசூலிக்கும் தவறான போக்குவரத்து சட்டங்களால் ஏமாறாதீர்கள்!

போலி போக்குவரத்து விதிகள் ஆன்லைனில் பரப்பப்படுவது குறித்து ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை...

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ள வீட்டு செலவுகள்

செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் வீட்டுச் செலவினங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட பருவகாலமாக சரிசெய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், செப்டம்பரில் வீட்டுச் செலவு...

ஆஸ்திரேலியாவின் எரிவாயு ஏற்றுமதி பற்றி வெளியான அறிக்கை

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்துள்ள எரிவாயுவின் அளவு 22 ஆண்டுகளுக்கான உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்று ஒரு புதிய அறிக்கை...

Android பயனர்களை விட மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படும் iPhone பயனர்கள்

மோசடி மற்றும் scam குறுஞ்செய்திகளால் iPhone-ஐ விட Android பயனர்கள் பாதிக்கப்படுவது 58% குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வானது Google நிறுவனத்தால் YouGov என்ற...