Newsஅதிக கடன் சுமையில் சிக்கியுள்ள எலன் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம்

அதிக கடன் சுமையில் சிக்கியுள்ள எலன் மஸ்க்கின் ட்விட்டர் நிறுவனம்

-

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு விதமான மாற்றங்களை அந்நிறுவனத்தில் கொண்டு வந்துள்ளார்.

முதலில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நீக்கப்பட்ட சிலர் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டனர்.

இதில் பதிவிடும் கருத்துகள் தொடர்பாக மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன. இதனால் விளம்பரதாரர்கள் வழங்கும் விளம்பரங்கள் படிபடியாக குறைந்தது.

முன்னதாக மஸ்க் , ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள். நிறுவனம் லாபப் பாதையில் பயணிக்கும் என கடந்த ஏப்ரலில் தெரிவித்து இருந்தார்.

அதன் பின், விளம்பரத் துறையில் அனுபவமுள்ள லிண்டா யாக்காரினோவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.

இருப்பினும், ஒரு நாளில் இத்தனை ட்விட்களை மட்டும் தான் பயனாளர்கள் பார்க்க முடியும் என ட்விட்டரில் சில கட்டுப்பாடுகளை விதித்தது பயனாளர்களை கவலையடைய செய்தது.

தற்போது ட்விட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்ததால் நிறுவனம் இன்னும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

வணிக ஆலோசனையை வழங்கும் ட்விட்டுக்கான பதிலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ட்விட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல ட்விட்டருக்கு அதிக அளவிலான கடன்சுமை இருக்கிறது.

வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக ட்விட்டரை லாபப்பாதைக்கு கொண்டு வரவேண்டும் எனக்கூறியுள்ளார்.

இந்த நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

மெல்பேர்ணில் இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு கிராமத்தை வாங்கலாம்!

மெல்பேர்ணில் உள்ள இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு முழு கிராமத்தையும் வழங்கும் ஒரு தனித்துவமான சொத்து ஒப்பந்தம் Mount Dandenong-இல் நடைபெறுகிறது. மெல்பேர்ணுக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...