Newsகடலில் நாயுடன் 2 மாதங்கள் தத்தளித்த அவுஸ்திரேலிய மாலுமி

கடலில் நாயுடன் 2 மாதங்கள் தத்தளித்த அவுஸ்திரேலிய மாலுமி

-

அவுஸ்திரேலிய மாலுமி ஒருவர் இரண்டு மாதங்களாக தன்னுடைய நாயுடன் பசிபிக் கடலில் உயிரை பிடித்து கொண்டு தத்தளித்த நிலையில், அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை சேர்ந்த 51 வயதான டிம் ஷடாக் (Tim Shaddock) என்ற மாலுமி தன்னுடைய பெல்லா(Bella) என்ற வளர்ப்பு நாயுடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் மெக்சிகோவில் இருந்து பிரெஞ்சு பாலினேசியா-வுக்கு படகில் புறப்பட்டுள்ளார்.

ஆனால், டிம் ஷடாக் பயணத்தை தொடங்கிய சில வாரங்களுக்கு பிறகு அவருடைய படகு புயலால் கடுமையாக சேதமடைந்தது.

கிட்டத்தட்ட 6000 கி.மீ நெடும் பயணத்தை மெக்சிகோவில் இருந்து தொடங்கிய டிம் ஷடாக்-க்கு அதிர்ச்சி தரும்படியாக ஏற்பட்ட மோசமான வானிலை அவரது படகில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் பிரிவை சேதப்படுத்தியது.

இதனால் அவரும், அவரது வளர்ப்பு நாய் பெல்லா-வும் வடக்கு பசிபிக் பெருங்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

இரண்டு மாதங்களாக கடலில் மிதந்த படி தத்தளித்த டிம் ஷடாக் உயிருடன் பிடித்த மீன்களை சாப்பிட்டும், மழை தண்ணீரையும் குடித்தும் உயிர் பிழைத்து வந்துள்ளார்.

காணாமல் போன அவுஸ்திரேலிய மாலுமி டிம் ஷடாக்கை ஹெலிகாப்டர் ஒன்று கண்டதை தொடர்ந்து, அவரும், அவருடைய வளர்ப்பு நாயும் இந்த வாரம் மீன்பிடி இழுவை படகு ஒன்றின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

டிம் ஷடாக் மீட்கப்பட்ட போது மெலிந்த உடலுடனும், மிக நீண்ட தாடியுடனும் காணப்பட்டார், அப்போது அவரை பரிசோதித்த மீட்பு படகில் இருந்த மருத்துவர், அவர் மிதமான பாதிப்புகளுடன் நல்ல நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலிய செய்தி நிறுவனமான 9நியூஸிடம் தெரிவித்தார்.

மீட்பு பிறகு அவரிடம் இருந்து 9 நியூஸ் பெற்ற வீடியோவில் பேசிய அவர், மிகவும் கடுமையான சோதனையை நான் கடலில் அனுபவித்து இருக்கிறேன், எனக்கு நல்ல ஓய்வும், நல்ல உணவும் தேவைப்படுகிறது, மற்றப்படி நான் நல்லபடியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மீட்பு படகு மெக்சிகோவுக்கு திரும்பிய நிலையில், அவருக்கு கூடுதல் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...