News70 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவில் மாறும் ஒரு நடைமுறை

70 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவில் மாறும் ஒரு நடைமுறை

-

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின், பிரித்தானிய வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ இருக்கிறது. இனி மன்னர் பெயரால் பிரித்தானிய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட உள்ளன.

1952ஆம் ஆண்டு வரை, மன்னர் ஆறாம் ஜார்ஜ் அரசாண்டதால், பிரித்தானிய பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்பட்டுவந்தன.

அவர் மரணமடைந்ததும் ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்க, அப்போதிலிருந்து சுமார் 70 ஆண்டுகளாக, மகாராணியார் பெயரில்தான் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

தற்போது தன் தாயாரின் மறைவைத் தொடர்ந்து சார்லஸ் மன்னராகியுள்ளதால், மீண்டும் பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்பட உள்ளன.

பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் ’Her Majesty’ என்னும் வார்த்தைகளுக்கு பதிலாக இனி ‘His Majesty’ என்னும் வார்த்தைகள் இடம்பிடிக்கும்.
ஆனால், மன்னர் சார்லசுக்கு பாஸ்போர்ட் கிடையாதாம். பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்படுவதால் அவருக்கு பாஸ்போர்ட் கிடையாது.

ஆகவே, மன்னர் சார்லஸ் வெளிநாடு செல்லும்போது அவர் பாஸ்போர்ட் இல்லாமலே பயணிப்பார்.

புதிய பாஸ்போர்ட்கள் இந்த வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஏற்கனவே மகாராணியார் பெயரால் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்கள் தீர்ந்துபோன பிறகே புதிய பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம், மன்னர் சார்லசுக்கு எதையும் வீணாக்குவது பிடிக்காது.

மேலும், மன்னர் பெயரால் பாஸ்போர்ட்கள் வழங்கப்படப்போகின்றன என்றாலும், ஏற்கனவே மகாராணியார் பெயரால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...