News70 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவில் மாறும் ஒரு நடைமுறை

70 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியாவில் மாறும் ஒரு நடைமுறை

-

சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின், பிரித்தானிய வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ இருக்கிறது. இனி மன்னர் பெயரால் பிரித்தானிய பாஸ்போர்ட்கள் வழங்கப்பட உள்ளன.

1952ஆம் ஆண்டு வரை, மன்னர் ஆறாம் ஜார்ஜ் அரசாண்டதால், பிரித்தானிய பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்பட்டுவந்தன.

அவர் மரணமடைந்ததும் ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்க, அப்போதிலிருந்து சுமார் 70 ஆண்டுகளாக, மகாராணியார் பெயரில்தான் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுவருகின்றன.

தற்போது தன் தாயாரின் மறைவைத் தொடர்ந்து சார்லஸ் மன்னராகியுள்ளதால், மீண்டும் பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்பட உள்ளன.

பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் ’Her Majesty’ என்னும் வார்த்தைகளுக்கு பதிலாக இனி ‘His Majesty’ என்னும் வார்த்தைகள் இடம்பிடிக்கும்.
ஆனால், மன்னர் சார்லசுக்கு பாஸ்போர்ட் கிடையாதாம். பாஸ்போர்ட்கள் மன்னர் பெயரால் வழங்கப்படுவதால் அவருக்கு பாஸ்போர்ட் கிடையாது.

ஆகவே, மன்னர் சார்லஸ் வெளிநாடு செல்லும்போது அவர் பாஸ்போர்ட் இல்லாமலே பயணிப்பார்.

புதிய பாஸ்போர்ட்கள் இந்த வாரத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், ஏற்கனவே மகாராணியார் பெயரால் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட்கள் தீர்ந்துபோன பிறகே புதிய பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம், மன்னர் சார்லசுக்கு எதையும் வீணாக்குவது பிடிக்காது.

மேலும், மன்னர் பெயரால் பாஸ்போர்ட்கள் வழங்கப்படப்போகின்றன என்றாலும், ஏற்கனவே மகாராணியார் பெயரால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

டிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி...

எரிவாயுவை இறக்குமதி செய்யத் தயாராகி வரும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா எரிவாயு இறக்குமதி செய்யத் தயாராகி வருவதாக ஊடக அறிக்கைகள் மீது ஆளும் தொழிலாளர் கட்சி பொய் சொல்வதாக எதிர்க்கட்சியான லிபரல் அலையன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. உலகின்...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு சிறுபான்மை அரசாங்கமா?

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுபான்மை அரசாங்கம் உருவாகக்கூடும் என்று ஒரு புதிய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் பொது...

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் சிவப்பாக மாறிய வானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஒரு அரிய சிவப்பு நிற நிலவை ஆஸ்திரேலியர்கள் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த நாளில், மற்ற நாட்களை பெரியதாகவும், சிவப்பு...

ஆல்பிரட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் வழங்கும் நிவாரணம்

ஆல்பிரட் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் மீட்பு உதவித்தொகையை ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை இன்று (11) பிற்பகல் 2.00 மணி முதல்...