Newsஅவுஸ்திரேலிய இராணுவ வீரரின் வழக்கு தோல்வி

அவுஸ்திரேலிய இராணுவ வீரரின் வழக்கு தோல்வி

-

ஆப்கானிஸ்தானில் 4 பேரை சட்டவிரோதமாக கொன்றதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவுஸ்திரேலியாவின் முன்னாள் போர் வீரர் மேல்முறையீடு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் உயரடுக்கு சிறப்பு விமான சேவை பிரிவின் முன்னாள் ஓய்வு பெற்ற வீரரான Ben Roberts-Smith, ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் சேவையாற்றிய போது சட்டவிரோதமாக 6 பேரை கொன்றதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று 2018 கட்டுரை வெளியிட்டு இருந்தது.

இதையடுத்து தன் மீது அவதூறு பரப்பும் விதமாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்து பத்திரிக்கைக்கு எதிராக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

அதனடிப்படையில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் முடிவில், ஜூன் 1 திகதி பத்திரிக்கையின் குற்றச்சாட்டுகள் போலியானது இல்லை என்று தெரிவித்ததுடன், பென் ராபர்ட்ஸ்- ஸ்மித்தின் அவதூறு வழக்கு தோல்வியடைந்ததாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் கூறப்பட்ட 6 சட்டவிரோதமான கொலைகளில் 4க்கு பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தான் காரணம் என்றும் நீதிபதிகள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தற்போது போர் குற்றங்கள் தொடர்பான குற்றவியல் வழக்கின் கீழ் அவுஸ்திரேலிய பொலிஸாரின் விசாரணையில் உள்ளார்.

Latest news

இலங்கையில் மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் வழங்கும் Ditwah புயல் வெள்ள நிவாரணம்

இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500) இந்தக்...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Mario Alberto Pineida Martínez சர்வதேச...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...