Newsஅவுஸ்திரேலிய இராணுவ வீரரின் வழக்கு தோல்வி

அவுஸ்திரேலிய இராணுவ வீரரின் வழக்கு தோல்வி

-

ஆப்கானிஸ்தானில் 4 பேரை சட்டவிரோதமாக கொன்றதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவுஸ்திரேலியாவின் முன்னாள் போர் வீரர் மேல்முறையீடு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் உயரடுக்கு சிறப்பு விமான சேவை பிரிவின் முன்னாள் ஓய்வு பெற்ற வீரரான Ben Roberts-Smith, ஒரு தசாப்தத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் சேவையாற்றிய போது சட்டவிரோதமாக 6 பேரை கொன்றதாக அவுஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்று 2018 கட்டுரை வெளியிட்டு இருந்தது.

இதையடுத்து தன் மீது அவதூறு பரப்பும் விதமாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக தெரிவித்து பத்திரிக்கைக்கு எதிராக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார்.

அதனடிப்படையில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் முடிவில், ஜூன் 1 திகதி பத்திரிக்கையின் குற்றச்சாட்டுகள் போலியானது இல்லை என்று தெரிவித்ததுடன், பென் ராபர்ட்ஸ்- ஸ்மித்தின் அவதூறு வழக்கு தோல்வியடைந்ததாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் கூறப்பட்ட 6 சட்டவிரோதமான கொலைகளில் 4க்கு பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தான் காரணம் என்றும் நீதிபதிகள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பென் ராபர்ட்ஸ்- ஸ்மித் தற்போது போர் குற்றங்கள் தொடர்பான குற்றவியல் வழக்கின் கீழ் அவுஸ்திரேலிய பொலிஸாரின் விசாரணையில் உள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...