Newsகணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை - துயர சம்பவம்

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை – துயர சம்பவம்

-

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரமக்குடி நேரு நகரை சேர்ந்தவர் சுதாகரன் 36. இவரது மனைவி – தாரணி காமாட்சி 25. இவர்களுக்கு 3 வயதில் ஹர்சித் என்ற ஆண் குழந்தை உள்ளது. தச்சு வேலை செய்த சுதாகரன், நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாடியிலிருந்து நிலை தடுமாறி விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்தவரை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மாலை இறந்தார்.

கணவர் இறந்த செய்தி அறிந்த மனைவி தாரணி காமாட்சி வேதனை அடைந்தார். மனமுடைந்தவர் இரவு வீட்டில் மின் விசிறியில் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரமக்குடி போலீசார் விசாரித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...