Newsஒரே மாதத்தில் 700-இற்கும் மேற்பட்டோருக்கு சிறை தண்டனை வழங்கிய பிரான்ஸ்

ஒரே மாதத்தில் 700-இற்கும் மேற்பட்டோருக்கு சிறை தண்டனை வழங்கிய பிரான்ஸ்

-

பிரான்ஸ் நாட்டில் சில வாரங்களுக்கு முன்பு நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாகக் கூறி பொலிஸார் துப்பாக்கியால் சூடு நடத்தினர்.

இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் காவல்துறையைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த போராட்டம் கலவரமாக மாறி வன்முறை வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை சிறப்புப் படைகள் மற்றும் சுமார் 45,000 பாதுகாப்புப் படைகளைக் கொண்டு 4 நாட்களாக பெரும் முயற்சி செய்து நிலைமையை அந்நாட்டு அரசாங்கம் கட்டுக்குள் கொண்டு வந்தது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த கலவரம் தொடர்பாக ஏற்கனவே 600 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 700-க்கும் அதிகமானோருக்குக் கடந்த ஒரு மாதத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 1,278 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நன்றி தமிழன்

Latest news

10 நாடுகளுக்கு விரிவடைந்து, விசா தேவைகளை எளிதாக்கும் Australian Immi App

ஆஸ்திரேலிய Immi App மேலும் 10 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான மக்களின் விசா தேவைகளை எளிதாக்குகிறது. அதன்படி, செப்டம்பர் 30, 2025 முதல், முன்னர் கைரேகைகளை...

ஆஸ்திரேலியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது குறித்து அல்பானீஸ் கவலை

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு அதிக வருமானத்தை அளிக்கும் சீனாவிற்கு இரும்புத் தாது ஏற்றுமதியை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும்...

போலி நாணயத்தாள்கள் பற்றி கவனமாக இருங்கள் – காவல்துறை எச்சரிக்கை

போலி நாணயத்தாள்களின் அதிகரிப்பு குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறையினர், அடிலெய்டில் உள்ள வணிக நிறுவனங்களில் கள்ளநோட்டு கவுண்டர்களிடம் ஒப்படைக்கப்படுவது அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். கடந்த...

ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வரி செலுத்தாத பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் (ATO) தெரிவித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை...

எலோன் மஸ்க் தொடர்பில் வெளியான சமீபத்திய அறிக்கை

உலகில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை வைத்திருக்கும் முதல் நபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். அமெரிக்க பங்குச் சந்தையில் டெஸ்லா பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்ததால்...

இன்று தொடங்கும் விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம்

விக்டோரியாவின் 2025–26 திறன் இடம்பெயர்வு திட்டம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. விக்டோரியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் உள்துறைத் துறை, 2025–2026 திட்ட ஆண்டிற்காக விக்டோரியாவிற்கு...