Newsஅமெரிக்க வரலாற்றில் கடற்படைக்கு முதல் பெண் தளபதி

அமெரிக்க வரலாற்றில் கடற்படைக்கு முதல் பெண் தளபதி

-

அமெரிக்க கடற்படையின் தளபதியாக பெண் ஒருவரை நியமிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.

அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி அமெரிக்க கடற்படையில் 38 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர் மற்றும் தற்போதைய துணைத் தலைவராக உள்ளார். அவரையே கடற்படைத்தளபதியாக நியமிக்க அதிபர் பைடன் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்த நியமனம் அந்நாட்டு செனட் சபையால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. செனட் இந்த நியமனத்திற்கு அனுமதி அளித்தால், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைவராக இருந்த அட்மிரல் லிசா ஃபன்செட்டி அமெரிக்க கடற்படையின் முதல் பெண் தளபதியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

“தனது வாழ்க்கை முழுவதும், அட்மிரல் ஃபிரான்செட்டி செயல்பாட்டு மற்றும் கொள்கை ஆகிய இரண்டிலும் விரிவான நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்” என்று பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதேவேளை அமெரிக்க கடற்படையின் பசுபிக் கடற்படையின் தற்போதைய தளபதியான அட்மிரல் சாமுவேல் பாப்பரோவை கடற்படை தளபதியாக தேர்ந்தெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் அதிபர் பைடனுக்கு பரிந்துரைத்திருந்தார்.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...