NewsNetflix கடவுச்சொல்லை பகிர இனி தடை

Netflix கடவுச்சொல்லை பகிர இனி தடை

-

நெட்ஃப்ளிக்ஸ் பயனர்கள் தங்கள் கணக்கின் கடவுச்சொல்லை பகிர்வதில் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்தியுள்ளது.

முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையான நெட்ஃபிக்ஸ் (Netflix) இந்தியாவில் கடவுச்சொல் பகிர்வு குறித்த தனது உறுப்பினர் விதிகளை மறுபரிசீலனை செய்வதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

“இந்தியாவில் உள்ள வீட்டிற்கு வெளியே Netflix ஐப் பகிரும் உறுப்பினர்களுக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புவோம்” என்று Netflix ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Netflix கணக்கு ஒரு வீட்டு உபயோகத்திற்கானது. அந்த வீட்டில் வசிக்கும் அனைவரும் எங்கிருந்தாலும் Netflix ஐப் பயன்படுத்தலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு கடவுச்சொற்களை வழங்க அனுமதிக்கவில்லை என்று நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

”உங்கள் Netflix கணக்கை நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்த வேண்டும். கணக்கு கடவுச்சொல்லை இனி மற்றவர்களுடன் பகிர அனுமதிக்கப்படாது. பாஸ்வேர்டை வெளியாட்களுடன் பகிர்ந்தால் புதிய கணக்கு மற்றும் கட்டணங்கள் ஏற்படும்,” என நெட்ஃபிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

உலகில் அதிகம் பார்க்கப்படும் OTT இயங்குதளம் Netflix ஆகும். மே மாதம் முதல், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மெக்சிகோ மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் கடவுச்சொல் பகிர்வை நெட்ஃபிக்ஸ் கட்டுப்படுத்தியுள்ளது.

இந்தியாவைத் தவிர, இந்தோனேசியா, குரோஷியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளும் வியாழக்கிழமை முதல் கடவுச்சொற்களைப் பகிர்வதைக் கட்டுப்படுத்துகின்றன.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...