Newsஇத்தாலியில் தண்ணீர் பஞ்சத்தால் அவதிபடும் சுற்றுலா பயணிகள்

இத்தாலியில் தண்ணீர் பஞ்சத்தால் அவதிபடும் சுற்றுலா பயணிகள்

-

புவி வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலகின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில நாடுகளில் அதீத மழைப்பொழிவும், சில நாடுகளில் கடுமையான வறட்சியும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தற்போது வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது.

இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், பிரான்ஸ், ஜெர்மன், போலாந்து உள்ளிட்ட நாடுகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தாலியின் 16 நகரங்களில் கடுமையான வெப்பம் காரணமாக அண்மையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்கு பகல் 11 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதை முடிந்தவரை தவிர்க்குமாறும், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்புகள் உள்ளவர்களை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இத்தாலியில் தற்போது 46 டிகிரி வெயில் வாட்டி எடுத்து வருவதால் அங்கு அதீத வெப்ப அலை வீசுகிறது. தலைநகர் ரோமில் வீசி வரும் அனல் காற்று காரணமாக அந்நாட்டு மக்களும், சுற்றுலா பயணிகளும் பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் கையில் குடையுனும், தலையில் தொப்பியுடனும் சுற்றி வருகின்றனர்.வெயிலின் தாக்கத்தால் அங்கு தண்ணீர் தேவை அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதன் விளைவாக ரோம் நகரில் குடிநீர் கேன்களின் விலை அதிகரித்துள்ளது. அந்நகரில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் குழாய்களில் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் நீண்ட வரிசைகளில் காத்திருந்து தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

வணிக குற்றங்களை சமாளிக்க NSW அரசின் புதிய உத்தி

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு புதிய உத்தியை வெளியிட்டுள்ளது. "Operation Percentile" என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நடவடிக்கை, NSW...

தெற்கு ஆஸ்திரேலிய மீனவர்களுக்கு புதிய மீன்பிடி கட்டுப்பாடுகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பொழுதுபோக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். மேலும் Spencer வளைகுடா மற்றும்...

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 19 வயது ஓட்டுநர்

மேற்கு கிப்ஸ்லாந்தின் Buln Buln-ஐ சேர்ந்த 19 வயது ஓட்டுநர் ஒருவர் மீது வேகமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு McFlurry காரை ஓட்டிச்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் விக்டோரிய சிறுவன்

விக்டோரியாவைச் சேர்ந்த Brock Mivett என்ற 10 வயது சிறுவன், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக தனது பொம்மை ரயில் சேகரிப்பின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். அவர்...

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 19 வயது ஓட்டுநர்

மேற்கு கிப்ஸ்லாந்தின் Buln Buln-ஐ சேர்ந்த 19 வயது ஓட்டுநர் ஒருவர் மீது வேகமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு McFlurry காரை ஓட்டிச்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் விக்டோரிய சிறுவன்

விக்டோரியாவைச் சேர்ந்த Brock Mivett என்ற 10 வயது சிறுவன், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக தனது பொம்மை ரயில் சேகரிப்பின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். அவர்...