Brisbane9 மாதங்களில் 62 கிலோவை குறைத்த அவுஸ்திரேலிய இளம் பெண்

9 மாதங்களில் 62 கிலோவை குறைத்த அவுஸ்திரேலிய இளம் பெண்

-

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் தனது அதீத உடல் எடையை குறைத்தது எப்படி என வெளிப்படுத்தியுள்ளார்.

பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த இளம் பெண் எல்லி பாக்ஸ்டர். இவர் அதீத உடல் எடையை பதின்பருவத்திலேயே கொண்டிருந்தார். வளர்ந்து வரும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட இவர், 10 வயதில் இருந்தே எட்டு இடுப்பு அறுவை சிகிச்சைகளை தாங்கினார்.

இவ்வாறாக தொடர்ந்து மருத்துவமனையில் இருந்ததும், அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதுமாக இருந்ததால் எல்லியினால் உடற்பயிற்சி என்பதை செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக அவர் 17 வயதில் 142 கிலோ உடல் எடையை எட்டினார். இதனால் விரக்தி அடைந்த எல்லி, தன்னுடைய 18வது பிறந்தநாள் வருவதற்குள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பெற்றோரின் ஆதரவுடன் Gastric sleeve weight loss செயல்முறையை மேற்கொண்டார் எல்லி. இந்த செயல்முறையில் உடல் எடை குறையத் தொடங்கினாலும் பல சவால்களை எல்லி எதிர்கொண்டார்.

முதலில் அதற்கான அறுவை சிகிச்சையை செய்ய விரும்பும் மருத்துவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்துள்ளது. இறுதியில் எல்லியை ஆதரிக்க மருத்துவர் கிடைத்தார்.

அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் அதற்கு முந்தைய உணவைப் பின்பற்ற வேண்டியிருந்தது. முதல் 15 நாட்களில் எல்லி 7 கிலோ குறைந்து அறுவை சிகிச்சைக்கு தயாராகி இருந்தார்.

சில உணவுகள் அவரை நன்றாக இருப்பதாக உணர வைத்துள்ளது மற்றும் 30 கிலோ எடையைக் குறைத்தது. எல்லிக்கு அறுவை சிகிச்சை முடிந்து 9 மாதங்களுக்கு பின் 2021யில், தனது 18வது வயதில் 80 கிலோ எடையை எட்டினார்.

அதாவது அவர் 142 கிலோ உடல் எடையில் இருந்து 62 கிலோவை ஒன்பது மாதங்களில் குறைத்திருக்கிறார்.

Latest news

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

தென்கிழக்கு மெல்பேர்ணில் நடந்த பயங்கர விபத்து – இருவர் பலி

மெல்பேர்ணின் தென்கிழக்கில் இன்று அதிகாலை இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மெல்பேர்ணின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மீ...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...