Newsகொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

-

கோவை வட வள்ளி வேம்பு அவென்யூயில் குடும்பமொன்று கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34) பொறியியலாளர். இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்றுள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடன் இராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார்.

6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.

பொலிஸார் இராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் பொறியியலாளர் இராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை பொலிஸார் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

பொறியியலாளர் இராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 இலட்சம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் இராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம்.

அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த் தணையை காண்பித்தனர். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, இராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, பொலிஸார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

உணவு கொடுப்பனவுகளில் வேறு பொருட்காள் வாங்கிய ஊழியர்கள் பணி நீக்கம்

சலவை சோப்பு, wine கிளாஸ்கள் மற்றும் முகப்பரு சிகிச்சை பொருட்கள் போன்றவற்றில் METAவின் உணவு கொடுப்பனவுகளைப் பயன்படுத்தியதற்காக Meta அதன் லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் சுமார்...

Mpox குறித்து விக்டோரியர்களுக்கு சுகாதார எச்சரிக்கை

Mpox இன் ஆபத்து குறித்து விக்டோரியா குடியிருப்பாளர்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, விக்டோரியா மாநிலத்தில் பதிவாகியுள்ள Mpox நோயாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு...

10 வயது சிறுவர்களை சிறையில் அடைக்கத் தொடங்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

அவுஸ்திரேலியாவில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பேற்கும் வயதை 10 வருடங்களாக குறைக்க வடக்கு பிரதேச நிர்வாக பிராந்தியம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் வயது வரம்பை 12...

பொழுதுபோக்கை வணிகமாக மாற்றி ஆயிரக்கணக்கான டாலர்கள் சம்பாதிக்கலாம்

ஆஸ்திரேலியாவில் புதிய தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை பிசினஸ் விக்டோரியா உங்களுக்கு வழங்கியுள்ளது. பொழுதுபோக்கை ஒரு வணிகமாக வளர்ப்பதே இதன் நோக்கமாகும், மேலும் வணிகமாக மாற்றக்கூடிய பல...

திரும்பப் பெறப்படும் பிரபலமான குழந்தை தொட்டில்

ஆஸ்திரேலிய தாய்மார்கள் மத்தியில் பிரபலமான குழந்தை தொட்டில் குழந்தைகளுக்கு ஏற்படும் அபாயம் காரணமாக திரும்ப அழைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சுவாசிப்பதில் சிரமம் குறித்து தயாரிப்பு பாதுகாப்பு ஆஸ்திரேலியா வெளியிட்ட...

60 வயதிற்கு மேற்பட்ட விக்டோரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

60 வயதிற்கு மேற்பட்ட விக்டோரியன் குடியிருப்பாளர்கள் இந்த மாதம் முழுவதும் "The Victorian Seniors Festival" இல் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. விக்டோரியா மாநிலம் முழுவதும் முதியோர்கள்...