Newsகொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

-

கோவை வட வள்ளி வேம்பு அவென்யூயில் குடும்பமொன்று கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை வடவள்ளி வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34) பொறியியலாளர். இவரது மனைவி லக்ஷயா (29). பட்டதாரி. இவர் பிரெஞ்சு மொழியில் பட்டம் பெற்றுள்ளார். இவர்களுக்கு யக்சிதா (10) என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பாடசாலையில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடன் இராஜேஷின் தாய் பிரேமா (74) என்ப வரும் வசித்து வந்தார்.

6 மாதங்களுக்கு முன்பு தான் இவர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறினார். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இராஜேசின் வீடு பூட்டப்பட்டு கிடந்தது. நேற்று மாலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இராஜேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும், லக்ஷயா, யக்சிதா, பிரேமா ஆகியோர் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர்.

பொலிஸார் இராஜேஷின் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அறையில் பொறியியலாளர் இராஜேஷ் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கைப்பட எழுதிய ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை பொலிஸார் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

பொறியியலாளர் இராஜேஷின் மனைவி லக்ஷயாவுக்கு, சின்மயா நகரை சேர்ந்த ஆசிரியரின் நட்பு கிடைத்தது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த ஆசிரியரிடம் தனது தேவைக்காக லக்ஷயா பணம் கேட்டுள்ளார். அவர் அடிக்கடி அவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்த பணம் மட்டுமின்றி தனது நண்பர் ஒருவரிடம் இருந்தும் பணத்தை வாங்கி லக்ஷயாவுக்கு கொடுத்தார். இதுவரை ரூ.31 இலட்சம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே ஆசிரியருக்கு பணம் கொடுத்த அவரது நண்பர் பணம் கேட்கவே, 2 பேரும் லக்ஷயாவிடம் சென்று பணத்தை கேட்டுள்ளனர். அவர் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் லக்ஷயாவின் கணவர் இராஜேசை சந்தித்து, உனது மனைவிக்கு நாங்கள் பணம் கொடுத்துள்ளோம்.

அதற்கான ஆதாரம் என பணம் அனுப்பியதற்கான வங்கி பரிவர்த் தணையை காண்பித்தனர். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் பணம் கொடுத்தவர்கள், அதனை கேட்டு தொந்தரவு கொடுக்கவே, இராஜேஷ் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, பொலிஸார் ராஜேஷின் மனைவிக்கு பணம் கொடுத்த ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...

Medibank வாடிக்கையாளர்கள் பெறும் நம்பமுடியாத நன்மைகள்

இந்த ஆண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு $160 மில்லியனை திருப்பித் தர Medibank நடவடிக்கை எடுத்துள்ளது. இது அதன் Give – Back திட்டத்தின் ஒரு பகுதி என்று...

விக்டோரியாவின் வீட்டுவசதி நெருக்கடியைத் தீர்க்க மேலும் 300,000 வீடுகள்

விக்டோரியன் மாநில அரசு மெல்பேர்ணின் பல பகுதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. டிராம் மற்றும் ரயில் நிலையங்களை உள்ளடக்கும் வகையில் புதிய வீடுகளைக் கட்டுவதில்...

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் பெறும் துறைகள் இதோ!

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய வேலைச் சந்தையில் மிகப்பெரிய சம்பள உயர்வைப் பதிவு செய்த வேலைத் துறைகள் குறித்த புதிய தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு...

விக்டோரியாவின் வீட்டுவசதி நெருக்கடியைத் தீர்க்க மேலும் 300,000 வீடுகள்

விக்டோரியன் மாநில அரசு மெல்பேர்ணின் பல பகுதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. டிராம் மற்றும் ரயில் நிலையங்களை உள்ளடக்கும் வகையில் புதிய வீடுகளைக் கட்டுவதில்...

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் அதிக ஊதியம் பெறும் துறைகள் இதோ!

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய வேலைச் சந்தையில் மிகப்பெரிய சம்பள உயர்வைப் பதிவு செய்த வேலைத் துறைகள் குறித்த புதிய தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு...