Cinemaஹிஜாப் அணியாத நடிகைக்கு சிறைத் தண்டனை விதித்த ஈரான்

ஹிஜாப் அணியாத நடிகைக்கு சிறைத் தண்டனை விதித்த ஈரான்

-

திரைப்பட விழாவில் நடிகை ஹிஜாப் அணியாமல் இருப்பது போன்ற விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டமையின் காரணமாக, திரைப்பட விழாவை தடை செய்வதற்கு ஈரான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

“சட்டத்தை மீறிய ஒரு சுவரொட்டியில் ஹஜாப் இல்லாத பெண்ணின் படம் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, கலாசார அமைச்சர் தனிப்பட்ட முறையில் ISFA திரைப்பட விழாவின் 13 ஆவது பதிப்பைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார்” என்று அந்நாட்டு செய்தி நிறுவனமான IRNA செய்தி பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்த திரைப்பட விழாவுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானிய குறும்பட சங்கம் (ISFA) அதன் வரவிருக்கும் குறும்பட விழாவிற்காக இந்த போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டரில் 1982 ஆம் ஆண்டு வெளியான தி டெத் ஆஃப் யாஸ்ட்கர்ட் திரைப்படத்தில் நடிகை சூசன் தஸ்லிமி காணப்படுகிறார். இந்த விழா செப்டம்பர் மாதம் நடைபெற இருந்தது.

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்து ஈரானியப் பெண்களுக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், 22 வயதான மஹ்சா அமினியின் மரணத்திற்குப் பிறகு தொடங்கிய ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து பெண்கள் ஆடை தொடர்பான விதிகளை மீறியுள்ளனர்.

மெஹ்சா அமினி ஆடை விதிமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த அவர், பின் கொல்லப்பட்டதை அடுத்து போராட்டம் வெடித்தது. முன்னதாக ஜூலை மாதம், அதிகரித்து வரும் பெண்களின் சட்டத்தை மீறுவதைப் பிடிக்க ரோந்துப்பணி மீண்டும் தொடங்கப்பட்டதாக காவல்துறை கூறியது.

பிரபல ஈரானிய நடிகை அப்சனே பயேகனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “அஃப்சானே பெய்கனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஐந்தாண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார், ஹிஜாப் அணியத் தவறியதற்காகவும், ஹிஜாப் சட்டத்தைப் பின்பற்றாததற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...