Sportsதமிழ் முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

தமிழ் முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்-லின் மனைவி வினி ராமனுக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண்ணான வினி ராமன் ஆகிய இருவரும் 2017ம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு இருவருக்கும் வெகு சிறப்புடன் இரு கலாச்சார முறைப்படியும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல்-லின் மனைவி வினி ராமன் கர்ப்பமாக உள்ள நிலையில், அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை வினி மேக்ஸ்வேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு கீழ் பலரும் தங்களது வாழ்த்தினையும் மகிழ்ச்சியையும் ஏராளமாக பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர், “தமிழ் பொண்ணு” அழகாக உள்ளது, வாழ்த்துக்கள் என கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியா பயணித்துள்ள மன்னர் சார்லசின் ரகசிய மகனால் உருவாகியுள்ள ஆபத்து

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவியான கமீலாவும் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில், சார்லசின் ரகசிய மகன் என தன்னை அழைத்துக்கொள்ளும் நபரால் பிரச்சினை ஒன்று...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகை உயர்வதற்கான காரணம் குறித்து புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு வாடகைக்கு சொத்து உரிமையாளர்களே காரணம் என்ற கூற்று ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் புதிய அறிக்கையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் மற்றும் வாடகைகள்...

விக்டோரியாவின் ஆசிரியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டமா?

விக்டோரியா மாகாண முதல்வர் ஜெசிந்தா ஆலன் மற்றும் எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை நிராகரித்துள்ளன. ஆஸ்திரேலிய...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பெர்த்தில் ஒரு வீட்டின் மீது மோதிய கார் – 3 பேர் பலி

இன்று காலை பெர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 5.10 மணியளவில் Carlisle...

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...