Sportsதமிழ் முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

தமிழ் முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்-லின் மனைவி வினி ராமனுக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண்ணான வினி ராமன் ஆகிய இருவரும் 2017ம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு இருவருக்கும் வெகு சிறப்புடன் இரு கலாச்சார முறைப்படியும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல்-லின் மனைவி வினி ராமன் கர்ப்பமாக உள்ள நிலையில், அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை வினி மேக்ஸ்வேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு கீழ் பலரும் தங்களது வாழ்த்தினையும் மகிழ்ச்சியையும் ஏராளமாக பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர், “தமிழ் பொண்ணு” அழகாக உள்ளது, வாழ்த்துக்கள் என கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...