Sportsதமிழ் முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

தமிழ் முறைப்படி மனைவிக்கு வளைகாப்பு செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல்-லின் மனைவி வினி ராமனுக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண்ணான வினி ராமன் ஆகிய இருவரும் 2017ம் ஆண்டு முதல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு இருவருக்கும் வெகு சிறப்புடன் இரு கலாச்சார முறைப்படியும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல்-லின் மனைவி வினி ராமன் கர்ப்பமாக உள்ள நிலையில், அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களை வினி மேக்ஸ்வேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவுக்கு கீழ் பலரும் தங்களது வாழ்த்தினையும் மகிழ்ச்சியையும் ஏராளமாக பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒருவர், “தமிழ் பொண்ணு” அழகாக உள்ளது, வாழ்த்துக்கள் என கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களை குறிவைக்கும் விக்டோரியா பொலிஸார்

வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய விக்டோரியா காவல்துறை தேசிய சாலை பாதுகாப்பு வாரம் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது மே 11 ஆம் திகதி தொடங்கி...

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...