Newsஅமெரிக்காவில் நாய் கூண்டில் அடைத்து 6 குழந்தைகள் சித்திரவதை

அமெரிக்காவில் நாய் கூண்டில் அடைத்து 6 குழந்தைகள் சித்திரவதை

-

அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், பெற்ற குழந்தைகளையே சித்திரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டு, உணவளிக்கப்படாமல், நாய் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

வேலி வியூ பவுல்வர்டு மற்றும் ஃபிளமிங்கோ சாலைக்கு அருகிலுள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்து அமண்டா ஸ்டாம்பர் அவசர உதவி எண்ணான 911ஐ அழைத்திருக்கிறார்.

பொலிஸார் அங்கு சென்று, பல நாய்களுடன் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணையில், பெற்றோரின் குற்றம் தெரிய வந்ததால், 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 7 குழந்தைகளுக்கு பெற்றோரான இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குழந்தைகளில் ஒருவர் தந்தையால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அவர் இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.

கூண்டிற்குள் இருந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தையின் கண்கள் வீங்கி மூடப்பட்டு இருந்தது. அக்குழந்தை உடல் முழுவதும் காயங்களுடன் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

ஃபிளமிங்கோ சாலைக்கு அருகில், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை கொண்ட ஒரு அபார்ட்மெண்டில் அத்தம்பதியினர் தங்கள் 7 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

முன்னராகவே பொலிஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என பொலிஸார் கேட்டனர். இது குறித்து பொலிஸாரிடம் அமண்டா தெரிவித்திருப்பதாவது:

‘நானும் அவரால் பாதிக்கப்பட்டேன். கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது.

எனது உயிருக்காகவும் எனது மற்ற குழந்தைகள் மற்றும் எனது குடும்பத்திற்காகவும் நான் பயந்ததனால் முன்னதாகவே காவல்துறையை நான் அழைக்கவில்லை. என் கணவர், பெல்டாலும், கயிறுகளாலும் மற்றும் கனம் வாய்ந்த பாத்திரங்களாலும் குழந்தைகளை அடிப்பார். ஏன அவர் தெரிவித்தார்.

நன்றி தமிழன்

Latest news

Bondi தாக்குதலுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்

Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.  Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...

87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...