Newsஇலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருது பெற்ற தமிழ்ப்பெண்

இலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருது பெற்ற தமிழ்ப்பெண்

-

ஆஸ்திரேலியாவின் இலக்குயத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருதினை இம்முறை Chai Times at Cinnamon Gardens என்ற நூலை எழுதியமைக்காக, தமிழ் பின்னணி கொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin, 1957ம் ஆண்டு தொங்கப்பட்டது. இது முதன் முதலாக Patrick White என்பவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் வரிசையில் தமிழ் பின்னணி கொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் அவர்களும் இடம் பிடித்துள்ளமை தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது.

இதை பற்றி மேலும் அவர் கூறுகையில் “Miles Franklin விருதானது எழுத்தாளர்களுக்கு நல்ல மதிப்பை தருவது மட்டுமன்றி, மேலும் இதுபோன்ற நல்ல நூல்களை எழுத உற்சாகத்தையும் தருகின்றது” என்றார்.

சங்கரி சந்திரன் எழுதிய நூல்கள் பற்றி அவர் கூறுகயில், ” எனது முதல் நூலான Song of the Sun God என் பூர்வீக நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதாகவும், Chai Times at Cinnamon Gardens நூலானது நான் புகுந்த நாடான ஆஸ்திரேலியா மீதுள்ள காதலை வெளிப்படுத்துகிறது” என தெரிவித்தார்.

Chai Times at Cinnamon Gardens நாவலானது சிட்னி நகரில் அமைந்துள்ள Cinnamon Gardens என்ற ஒரு முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்கள் மற்றும் அங்கு வேலை செய்கின்றவர்கள் பற்றிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...