Newsஇலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருது பெற்ற தமிழ்ப்பெண்

இலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருது பெற்ற தமிழ்ப்பெண்

-

ஆஸ்திரேலியாவின் இலக்குயத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin விருதினை இம்முறை Chai Times at Cinnamon Gardens என்ற நூலை எழுதியமைக்காக, தமிழ் பின்னணி கொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான அதியுயர் விருதான Miles Franklin, 1957ம் ஆண்டு தொங்கப்பட்டது. இது முதன் முதலாக Patrick White என்பவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்களின் வரிசையில் தமிழ் பின்னணி கொண்ட எழுத்தாளர் சங்கரி சந்திரன் அவர்களும் இடம் பிடித்துள்ளமை தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கிறது.

இதை பற்றி மேலும் அவர் கூறுகையில் “Miles Franklin விருதானது எழுத்தாளர்களுக்கு நல்ல மதிப்பை தருவது மட்டுமன்றி, மேலும் இதுபோன்ற நல்ல நூல்களை எழுத உற்சாகத்தையும் தருகின்றது” என்றார்.

சங்கரி சந்திரன் எழுதிய நூல்கள் பற்றி அவர் கூறுகயில், ” எனது முதல் நூலான Song of the Sun God என் பூர்வீக நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதாகவும், Chai Times at Cinnamon Gardens நூலானது நான் புகுந்த நாடான ஆஸ்திரேலியா மீதுள்ள காதலை வெளிப்படுத்துகிறது” என தெரிவித்தார்.

Chai Times at Cinnamon Gardens நாவலானது சிட்னி நகரில் அமைந்துள்ள Cinnamon Gardens என்ற ஒரு முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்கள் மற்றும் அங்கு வேலை செய்கின்றவர்கள் பற்றிய கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...