Newsஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்கு இடையில் தான் போட்டி

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்கு இடையில் தான் போட்டி

-

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் இடம்பெறுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அடுத்த தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெகிறது.

அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் இடையேதான் ஜனாதிபதி தேர்தலில் எப்போதும் போட்டி இருக்கும்.

அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன், ராபர்ட் கென்னடி, மரியன்னா வில்லியம்சன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

அதில் ஜோபைடனுக்கு 80 வயது ஆகி விட்டதால் அவருக்கு பதிலாக, தற்போது துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்(58) ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

குடியரசு கட்சி சார்பில் கடந்த முறை ஜனாதிபதியாக இருந்த டெனால்டு டிரம்ப், பர்கம், கிறிஸ்டி, விவேக் ராமசாமி, டிசாண்டிஸ், நிக்கி ஹாலே, உட்பட 13 பேர் அதிபர் வேட்பாளராக போட்டியிட உள்ளனர்.

அதில் டெனால்டு டிரம்ப், விவேக் ராமசாமி இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

டெனால்டு டிரம்ப் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதால் விவேக் ராமசாமிதான் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமியும்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலை வரும்பட்சத்தில் அமெரிக்க ஜனாதிபதிக்கு போட்டியிடும் 2 தமிழர்கள் என்று சொல்லலாம். அதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், விவேக் ராமசாமி நன்றாக தமிழ் பேசுவாராம். மேலும் அவர் வயது வெறும் 37 தான். இவர் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனால் மிகக்குறைந்த வயதுடைய அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையையும் பெறுவார்.

தொழில்முனைவோராக இருக்கும் அவர், தற்போது அமெரிக்க மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது.

Latest news

உக்ரைனில் வெடிகுண்டை செயலிழக்கச் செய்த ஆஸ்திரேலியர் உயிரிழப்பு

உக்ரைனில் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர் ஒருவரும் முன்னாள் ராணுவ வீரருமான ஆஸ்திரேலிய நபர் ஒருவர் உயிரிழந்தார். அவர் Prevail Together board...

விக்டோரியாவில் பழங்குடி பாறையை நாசமாக்கிய Graffiti கலைஞர்கள்

விக்டோரியாவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடமான Paradise நீர்வீழ்ச்சியில் உள்ள ஒரு பாறைச் சுவரில் ஒரு குழு சட்டவிரோதமாக Graffiti ஓவியத்தை வரைந்துள்ளது. Paradise நீர்வீழ்ச்சி...

யாழ்ப்பாணம், மட்டகளப்பில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி...

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

புதிய அமைச்சரவையை அறிமுகப்படுத்தினார் பிரதமர் 

தொழிற்கட்சியின் மகத்தான தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது புதிய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். இந்த மறுசீரமைப்பின் பெரிய வெற்றியாளர்களில் ஒருவராக Michelle Rowland உருவெடுத்துள்ளார்....

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...