Newsஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுந்ததாக தகவல்

ஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுந்ததாக தகவல்

-

ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று நேற்று முன்தினம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்­துள்­ளது.

ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக் கோள் ஆகும். இது 2018 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதில் டொப்ளர் விண்ட் லிடார் எனப்படும் அதிநவீன லேசர் கருவியை கொண்டுள்ளது.

இது வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் காலநிலை மாதிரிகளை மேம்படுத்த, ஐரோப்பா முழுவதும் வானிலை மையங்களுக்கு தரவுகளை வழங்கி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.

ஏயோலஸ் செயற்கைக்கோளில் கடந்த மே மாதம் எரிபொருள் தீர்ந்ததால், அதன் சுற்றுப்பாதையை பராமரிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) விண்வெளியில் உள்ள மற்ற விண்கலம் அல்லது செயற்கைக்கோளுடன் மோதும் அபாயத்தை குறைக்க செயற்கைக்கோளை வேண்டுமென்றே கடலில் மோத செய்ய முடிவு செய்தது.

ஏயோலஸ் செயற்கைக்கோள் மணிக்கு சுமார் 17,500 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறகு கிரீன்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் ஏயோலஸ் செயற்கைக்கோள் விழ்ந்துள்ளது. செயற்கைக்கோள் கீழே விழுந்­த திசையை மாற்றியதன் மூலம் அதில் இருந்து சிதறும் பாகங்கள், மக்கள் மற்றும் பிற பொருட்களின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் ஆனது தடுக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் பூமியின் காற்று மாதிரிகள் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது, இது வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த உதவியது. ஏயோலஸால் சேகரிக்கப்பட்ட தரவு, பல ஆண்டுகளாக வானிலை மையங்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது.

சுமார் 1,360 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், மூன்று வருடங்கள் சுற்றுப்பாதையில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏவப்பட்டது.

ஆனால், அதனைத்தாண்டி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விண்வெளியில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சூட்டப்படும் பிரபலமான பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் பிரபலமான பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய மாநிலங்களில் உள்ள சிறந்த பெயர்களை ஆராய்ச்சி நிறுவனமான McCrindle-இல் பகுப்பாய்வு...

பார்கின்சன் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

ஆஸ்திரேலிய மருத்துவர்கள் குழு ஒன்று பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளில் மேலும் மேம்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பார்கின்சன்...

விக்டோரியன் நீதிமன்றம் ஒரு நிறுவனத்திற்கு வழங்கிய இரட்டிப்பு தண்டனை

விக்டோரியன் மேல்முறையீட்டு நீதிமன்றம், விக்டோரியன் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு LH Holding Management ஊழியர் ஒருவர் Forklift வாகனத்தில் சிக்கி...

ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் ஈஸ்டர் வார இறுதியில் சிறிது மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நான்கு நாள் விடுமுறை முழுவதும்...

வேலை அழுத்தம் காரணமாக கோகைன் பயன்படுத்திய ஆஸ்திரேலிய அரசியல்வாதி

வேலையில் மன அழுத்தத்தைக் குறைக்க கோகைனைப் பயன்படுத்திய ஒரு அரசியல்வாதி பற்றிய செய்திகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்துள்ளன. முன்னாள் மாநில லிபரல் தலைவரான 40 வயதான டேவிட் ஸ்பியர்ஸ்,...

ஈஸ்டர் வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் மழை

ஆஸ்திரேலியாவின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் பிரதேசமும் ஈஸ்டர் வார இறுதியில் சிறிது மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நான்கு நாள் விடுமுறை முழுவதும்...