Newsஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுந்ததாக தகவல்

ஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுந்ததாக தகவல்

-

ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று நேற்று முன்தினம் அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்­துள்­ளது.

ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக் கோள் ஆகும். இது 2018 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதில் டொப்ளர் விண்ட் லிடார் எனப்படும் அதிநவீன லேசர் கருவியை கொண்டுள்ளது.

இது வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் காலநிலை மாதிரிகளை மேம்படுத்த, ஐரோப்பா முழுவதும் வானிலை மையங்களுக்கு தரவுகளை வழங்கி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.

ஏயோலஸ் செயற்கைக்கோளில் கடந்த மே மாதம் எரிபொருள் தீர்ந்ததால், அதன் சுற்றுப்பாதையை பராமரிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) விண்வெளியில் உள்ள மற்ற விண்கலம் அல்லது செயற்கைக்கோளுடன் மோதும் அபாயத்தை குறைக்க செயற்கைக்கோளை வேண்டுமென்றே கடலில் மோத செய்ய முடிவு செய்தது.

ஏயோலஸ் செயற்கைக்கோள் மணிக்கு சுமார் 17,500 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறகு கிரீன்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் ஏயோலஸ் செயற்கைக்கோள் விழ்ந்துள்ளது. செயற்கைக்கோள் கீழே விழுந்­த திசையை மாற்றியதன் மூலம் அதில் இருந்து சிதறும் பாகங்கள், மக்கள் மற்றும் பிற பொருட்களின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் ஆனது தடுக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் பூமியின் காற்று மாதிரிகள் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது, இது வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த உதவியது. ஏயோலஸால் சேகரிக்கப்பட்ட தரவு, பல ஆண்டுகளாக வானிலை மையங்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது.

சுமார் 1,360 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், மூன்று வருடங்கள் சுற்றுப்பாதையில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏவப்பட்டது.

ஆனால், அதனைத்தாண்டி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விண்வெளியில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...